பள்ளி மாணவியை ஆபாச படம் எடுத்து பாலியல் வன்புணர்வு செய்த ஆட்டோ டிரைவர் கைது

 

பள்ளி மாணவியை ஆபாச படம் எடுத்து பாலியல் வன்புணர்வு செய்த ஆட்டோ டிரைவர் கைது

பெண்களுக்கு எதிரான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி, வன்புணர்வு செய்து வந்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி, வன்புணர்வு செய்து வந்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மயிலோடு பகுதியை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி ஹால் டிக்கெட் வாங்க, கடந்த திங்கள் அன்று ஆட்டோவில் பள்ளிக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் மாணவி வீடு திரும்பாததால், பெற்றோர் பள்ளியில் விசாரித்தபோது, மாணவி பள்ளிக்கு வரவில்லை என கூறப்பட்டிருக்கிறது. அன்று மாலை அழுதபடியே வீடு திரும்பியிருக்கிறார் மாணவி. அவரிடம் பெற்றோர் விசாரித்தபோது, அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்ற ஆட்டோ ஓட்டுநர், மிரட்டி பாலியல் வன்புணர்வு  செய்துவிட்டதாக கூறியுள்ளார். 

ஆட்டோ டிரைவர் சரவணன்

சரவணன்

மேலும், மாணவியின் ஆபாச படத்தையும், சரவணன் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த சரவணன், கேரளா மாநிலம் கொட்டாரகரை பகுதியில் சென்று பதுங்கியிருந்துள்ளான். அவனை தக்கலை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு பிறகு தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.