பள்ளி மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி வந்த நபர்கள்.. அதிரடியாகக் கைது செய்த போலீசார்!

 

பள்ளி மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி வந்த நபர்கள்.. அதிரடியாகக் கைது செய்த போலீசார்!

கடந்த 2 ஆண்டுகளாகச் சிறுமியுடன் பழகி வந்த சந்தோஷ், சமீபத்தில் சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத போது பாலியல் தொல்லை கொடுத்து அதனை வீடியோவும் எடுத்துக் கொண்டுள்ளார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கூறைநாடு என்னும் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்(25) அதே பகுதியில் 10 ஆம் வகுப்பு மாணவியைக் காதலிப்பதாகக் கூறி பழகி வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாகச் சிறுமியுடன் பழகி வந்த சந்தோஷ், சமீபத்தில் சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத போது பாலியல் தொல்லை கொடுத்து அதனை வீடியோவும் எடுத்துக் கொண்டுள்ளார். இதனை வெளியே சொன்னால் இணையதளத்தில் போட்டுவிடுவேன் என்றும் கூறி மிரட்டி வந்துள்ளார். 

ttn

இதுமட்டுமில்லாமல், சந்தோஷ் அவரது நண்பரான கண்ணன்(36) என்பவருக்கும் அந்த வீடியோவை அனுப்ப, கண்ணனும் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அச்சமயம் பார்த்து சிறுமியின் பெற்றோர் வீட்டுக்கு வரவே கண்ணன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம்  இது குறித்து விசாரித்துள்ளனர். அதற்கு அந்த சிறுமி,. நடந்த அனைத்தையும் பெற்றோரிடம் கூறியுள்ளார். 

ttn

இதனையடுத்து சிறுமியின்  பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கண்ணன் மற்றும் சந்தோஷ் மீது புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது  குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.