பள்ளி மாணவனுடன் தகாத உறவு.. சென்னையில் கைது செய்யப்பட்ட கேரள ஆசிரியை!

 

பள்ளி மாணவனுடன் தகாத உறவு.. சென்னையில் கைது செய்யப்பட்ட கேரள ஆசிரியை!

பள்ளி மாணவனுடன் தகாத உறவு வைத்திருந்த கேரளாவைச் சேர்ந்த ஆசிரியை சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: பள்ளி மாணவனுடன் தகாத உறவு வைத்திருந்த கேரளாவைச் சேர்ந்த ஆசிரியை சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் டியோரனா தம்பி (வயது 40). அங்குள்ள சி.பி.எஸ்.இ. பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். பத்தாம் வகுப்பினருக்கு பாடம் எடுத்து இவருக்கு, அவரிடம் பயிலும் மாணவர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

அந்த தொடர்பு நாளடைவில் தகாத உறவாக மாறிய நிலையில், கடந்த 23-ஆம் தேதி யாருக்கும் தெரியாமல் மாணவனை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்துள்ளார் ஆசிரியை.

இதற்கிடையே, மாணவனை காணவில்லை என கேரள போலீசாரிடம் மாணவனின் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில், ஆசிரியையின் செல்ஃபோன் சிக்னலை வைத்து சென்னை சூளைமேட்டில் இருவரும் பதுங்கியிருப்பதை கேரள போலீசார் கண்டறிந்துள்ளனர்.

இதையடுத்து, சென்னை வந்த கேரள போலீசார், சூளைமேடு போலீசாரின் உதவியோடு நடத்திய தேடுதல் வேட்டையில், அப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தாய் – மகன் எனக் கூறிக் கொண்டு கடந்த 4 நாட்களாக தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

அதன்பின், உடனடியாக ஆசிரியையை கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும், ஆசிரியை டியோரனா தம்பி கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.