பள்ளி பேருந்தை கண்டாலே பயந்து நடுங்கும் 12 வயது மாணவி-வாகன ட்ரைவரின் வெறிச்செயலால் வந்த வினை  

 

பள்ளி பேருந்தை கண்டாலே பயந்து நடுங்கும் 12 வயது மாணவி-வாகன ட்ரைவரின் வெறிச்செயலால் வந்த வினை  

ஆந்திராவின்  நெல்லூர் மாவட்டத்தில் 8 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பள்ளி பஸ் டிரைவரை போலீசார் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.

ஆந்திராவின்  நெல்லூர் மாவட்டத்தில் 8 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பள்ளி பஸ் டிரைவரை போலீசார் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.

harassment

வித்யா விஹார் பள்ளியைச் சேர்ந்த பஸ் டிரைவர் சிவா,பேருந்தில் வரும் பள்ளி சிறுமியை ஆசை வார்த்தைகள்  கூறி  திண்டயல் நகர் அருகே தனியான  இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது சிறுமி பீதியடைந்து சத்தம் போட்டார் . உடனே, உள்ளூர்வாசிகள் அவளை மீட்க ஓடிவந்து அவர்கள் அவரைப் பிடித்து உதைத்து அவருடைய ஆடைகளை கழற்றினார்கள். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்தை அடைந்து சிவாவை தங்கள் காவலில் எடுத்துக்கொண்டனர்.

harass

இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோரும் சம்பவ இடத்திற்கு வந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி உள்ளூர்வாசிகளுடன் தர்ணா நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தியுள்ளனர்.