பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்த மாணவர்கள்: மாவட்ட ஆட்சியர் சர்ச்சை பதில்!

 

பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்த மாணவர்கள்: மாவட்ட ஆட்சியர் சர்ச்சை பதில்!

பள்ளி மாணவர்கள் கழிவறைகளைச் சுத்தம் செய்தது தொடர்பாக அந்த மாவட்டத்தின் ஆட்சியர்  விளக்கமளித்துள்ளார். 

மத்திய பிரதேசம் :  பள்ளி மாணவர்கள் கழிவறைகளைச் சுத்தம் செய்தது தொடர்பாக அந்த மாவட்டத்தின் ஆட்சியர்  விளக்கமளித்துள்ளார். 

toilet

மத்திய பிரதேச மாநிலத்தின் கந்துவா மாவட்டத்தின் சின்ஹாரா கிராமத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவர்கள் கழிவறையைச் சுத்தம் செய்யும் வீடியோ காட்சி  ஒன்று வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியது.அதில் பள்ளி மாணவர்கள் மாப்பை கொண்டு கழிவறையைச் சுத்தம் செய்கின்றனர்.

 

இந்நிலையில் இந்த வீடியோ குறித்து மாவட்ட ஆட்சியர் தன்வி சுந்தரியல் கூறும் போது, ‘மாணவர்கள் கழிவறைகளைச் சுத்தம் செய்வதில் எந்த தவறும் இல்லை. மாணவர்கள் சுத்தம் செய்யும் பயிற்சி அளிக்கப்பட்டது. அதனால் மாணவர்கள் அதில் ஈடுபட்டுள்ளனர். அதில் தவறேதும் இல்லை’ என்றார். மாவட்ட ஆட்சியரின் இந்த கருத்து  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.