பள்ளியில் உணவு உண்ட மாணவர் உயிரிழப்பு:!

 

பள்ளியில் உணவு உண்ட மாணவர் உயிரிழப்பு:!

கள்ளக்குறிச்சி அடுத்த மேல்நாரியனுாரில் பள்ளி விடுதியில் இரவு உணவு உண்ட 8-ம் வகுப்பு மாணவன் சஞ்சய் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளாது.

கள்ளக்குறிச்சி அடுத்த மேல்நாரியனுாரில் பள்ளி விடுதியில் இரவு உணவு உண்ட 8-ம் வகுப்பு மாணவன் சஞ்சய் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளாது.

சின்னசேலம் அருகே உள்ள மேல்நாரியப்பனூர் புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி  பள்ளியில்   8ம் வகுப்பு மாணவன் சஞ்சய்க்கு  நேற்று இரவு  விடுதியில் உணவு உண்ட பின்னர் பின் வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. பின்னர் உடல் நிலை சரியில்லாததால் மேல் நாரியப்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்று காண்பிக்கும் போது மயங்கி விழுந்து இறந்து விட்டார். பள்ளி விடுதியில் தங்கி படித்த மாணவன் திடீரென்று இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரவு உணவு உண்ட பின் வாந்தி எடுத்து மயங்கி விழுந்த சஞ்சய் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின் உயிரிழப்பு. உயிரிழந்த சிறுவன் உடல்நிலை சரியில்லாத நிலையிலேயே வீட்டிலிருந்து விடுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.