பள்ளியிலும் பாய்ந்தது “போக்ஸோ”- டஸ்டரால்   மாணவனுக்கு உடல் காயம் ,டபுள் மீனிங்கால் மாணவிக்கு மனக்காயம்-ஆசிரியர்கள் கைது 

 

பள்ளியிலும் பாய்ந்தது “போக்ஸோ”- டஸ்டரால்   மாணவனுக்கு உடல் காயம் ,டபுள் மீனிங்கால் மாணவிக்கு மனக்காயம்-ஆசிரியர்கள் கைது 

பெங்களூரு: கோரமங்கலா பகுதியில் உள்ள பிரபலமான ஒரு பள்ளியில் பிரகதி என்ற 36 வயது,பெண்ணின் 13 வயது மகனும், மகளும் படித்து வருகின்றனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும்  அந்த  பெண்ணுக்கு தனது பிள்ளைகள் படிக்கும் பள்ளியிலிருந்து டிசம்பர் 16 ன் தேதி உங்கள் மகன் பள்ளியில் கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு விட்டதாக போன் வந்தது.

பெங்களூரு: கோரமங்கலா பகுதியில் உள்ள பிரபலமான ஒரு பள்ளியில் பிரகதி என்ற 36 வயது,பெண்ணின் 13 வயது மகனும், மகளும் படித்து வருகின்றனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும்  அந்த  பெண்ணுக்கு தனது பிள்ளைகள் படிக்கும் பள்ளியிலிருந்து டிசம்பர் 16 ன் தேதி உங்கள் மகன் பள்ளியில் கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு விட்டதாக போன் வந்தது. உடனே பதறியயடித்து பள்ளிக்கு ஓடிய பிரகதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது, என்னவென்றால் அங்கு தன் மகனுக்கு கீழே விழுந்து அடிபடவில்லை, ஒரு கணக்கு வாத்தியார் டஸ்டரால் அடித்து மண்டையில் அடிபட்டது என்ற தகவல் கேட்டு அதிர்ச்சசியுற்று ப்ரின்சிபாலிடம் போனார்,ஆனால் பிரின்சி, ஆசிரியர் வெளியே போய்விட்டார், என்று மழுப்பலாக பதில்  சொல்லியுள்ளார்.

Handcuff

அதிர்ச்சியுற்ற பிரகதி மேலும் விசாரித்தபோது பிள்ளைகளை அந்த ஆசிரியர் ,போர்டு எக்ஸாம் எழுத விடமாட்டேன் என்றும், மாணவிகளிடம்  ஒரு ஆசிரியர் ரெட்டை அர்த்தமுள்ளபடி பேசுவதாகவும் என்ற தகவல் கேட்டு அதிர்ச்சியுற்று போலீசுக்கு போக முடிவு செய்தார்.இதை கண்டு பள்ளி நிர்வாகம்,எங்கள் பள்ளி பெயர் போலீசுக்கு போனால் கெட்டுவிடும் அதனால் அப்பெண்ணிடம் இனி இவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறோம்,மேலும் உங்கள் பிள்ளைகளின் பள்ளி கட்டணத்தை தள்ளுபடி செய்கிறோம் என்றனர்.
ஆனால் பிரகதி இதற்கு உடன் படாமல் பள்ளி மீது போலீசில் புகார் தந்தார். போலீசார் விசாரித்து பிரின்சிபால், ஆசிரியர் மேத்யூ மேலும் ஒரு ஆசிரியரை Children Sexual Offence க்காக  போக்ஸோ சட்டத்திலும் கைது செய்தனர் .