பள்ளிக்கு செல்லாமல் இருப்பதை கண்டித்ததால் 9ம் வகுப்பு மாணவி தற்கொலை !

 

பள்ளிக்கு செல்லாமல் இருப்பதை கண்டித்ததால் 9ம் வகுப்பு மாணவி தற்கொலை !

பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே ஏன் இருக்கிறாய் என தாய் திட்டியதால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது.
சென்னையை அடுத்த பொழிச்சலூர் கண்ணகி நகரை சேர்ந்த பாலாஜி என்பவரின் மகள் புஷ்பா தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். அவருக்கு வயது 14.

பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே ஏன் இருக்கிறாய் என தாய் திட்டியதால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது.
சென்னையை அடுத்த பொழிச்சலூர் கண்ணகி நகரை சேர்ந்த பாலாஜி என்பவரின் மகள் புஷ்பா தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். அவருக்கு வயது 14. இந்நிலையில் பள்ளிக்கு முறையாக செல்லாமல் அடிக்கடி விடுப்பு எடுத்துவிட்டு வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பள்ளிக்கு செல்லாமல் இருந்தால் படிப்பு கெட்டுவிடும், எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமே என தாய் கேட்டுள்ளார். பள்ளிக்கு செல்லாமல் இருப்பதற்கு வேறு ஏதேனும் காரணமா எனவும் கேட்டுள்ளார்.

suicide

ஆனால் மாணவி புஷ்பா எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த தாய் புஷ்பாவை கண்டபடி திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி புஷ்பா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் புஷ்பாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் உடலை பார்த்து தாயும், தந்தையும் கதறி அழுதனர். பள்ளிக்கூடம் செல்லவில்லை என்றாலும் குழந்தை உயிரோடு வீட்டிலேயே இருந்திருப்பாள். அவசரப்பட்டு கடுமையாக பேசி குழந்தையை கொன்றுவிட்டோமோ என தாயார் வேதனை அடைந்தார்.