பள்ளிக்குச் செல்லும் வயதில் பலாத்காரம் செய்த சிறுவன்… கூட்டாளியுடன் சேர்ந்து பெண்ணை எரித்த கொடூரம்

 

பள்ளிக்குச் செல்லும் வயதில் பலாத்காரம் செய்த சிறுவன்… கூட்டாளியுடன் சேர்ந்து பெண்ணை எரித்த கொடூரம்

இந்த மாத தொடக்கத்தில் ஒடிசாவைச் சேர்ந்த 28 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக 16 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

 

இந்த மாத தொடக்கத்தில் ஒடிசாவைச் சேர்ந்த 28 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக 16 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

rape

பிப்ரவரி 10 ஆம் தேதி, ஒடிசாவின் வடக்கு கோவா மாவட்டத்தில் போர்வோரிம் அருகே ஒரு வனப்பகுதியில் சிதைந்த நிலையில் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக போலீசார் கண்டுபிடித்தனர். இந்த குற்றத்திற்காக 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். அந்த சிறுவனின் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றத்தில் ஈடுபட்ட மற்றொரு குற்றவாளியை தேடி வருவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு எட்வின் கோலாகோ வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார். “பெண் உடலின் பிரேத பரிசோதனைக்கு பிறகு, அந்த பெண் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களால் கற்பழிப்பு செய்து, கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. “இந்த குற்றத்திற்க்காக ஒரு மைனர் சிறுவனை நாங்கள் கைது செய்துள்ளோம், மேலும் வயது முதிர்ந்த மற்றொரு கூட்டாளி குறித்து சிறுவன் எங்களிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்” என்று கோலாகோ கூறியுள்ளார்

இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்ட மற்றொரு குற்றவாளியின் அங்க அடையாளங்களை வைத்து வரையப்பட்ட படம் அனைத்து எல்லை சோதனைச் சாவடிகள் மற்றும் ரயில்வே போலீஸ் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.