பல பெண்களுடன் உல்லாசமாக இருந்தேன்…. பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா வைத்த சஞ்சீவி அதிர்ச்சி வாக்குமூலம்

 

பல பெண்களுடன் உல்லாசமாக இருந்தேன்…. பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா வைத்த சஞ்சீவி அதிர்ச்சி வாக்குமூலம்

நான் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளேன் என ஆதம்பாக்கம் பெண்கல் விடுதியில் ரகசிய கேமரா வைத்து சிக்கிய சஞ்சீவி வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை: நான் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளேன் என ஆதம்பாக்கம் பெண்கல் விடுதியில் ரகசிய கேமரா வைத்து சிக்கிய சஞ்சீவி கூறியுள்ளார்.

சென்னை ஆதம்பாக்கம் தில்லை நகர் முதல் தெருவில் ஒரு தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இதை திருச்சியை சேர்ந்த சஞ்சீவி என்பவர் நடத்தி வந்தார். இந்த அறையில் இருக்கும் குளியலறை, படுக்கையறை உள்ளிட்ட இடங்களில் கண்ணுக்கு தெரியாத பல ரகசிய கேமராக்களை சஞ்சீவி பொருத்தி இருந்தது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெண்கள் ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர். அதனையடுத்து சஞ்சீவி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் காவல்துறையினரிடம் சஞ்சீவி வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. அவர் கூறிய வாக்குமூலம் பின்வருமாறு: நான் 10 ஆண்டுகளாக கட்டுமான தொழிலில் இருக்கிறேன். சிவில் என்ஜினீயர் எனவும் 10 ஆண்டுகளாக கட்டுமான தொழிலில் இருக்கிறேன்.ஆதம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பை ரூ 24,000-க்கு வாடகைக்கு எடுத்தேன். ஆனால் குழந்தைகளுக்கு பிரபல பள்ளியில் இடம் கிடைக்காததால் அஸ்தினாபுரம் சென்றுவிட்டேன்.

vama

எனவே ஆதம்பாக்கம் வீட்டை பெண்கள் தங்கும் விடுதியாக மாற்றி சமூக வலைதளங்களில் விளம்பரம் கொடுத்தேன். ரூ 7,000 வாடகைக்கு 6 பெண்கள் வந்தனர். அவர்கள் அனைவரும் பகலில் வேலைக்கு சென்று விடுவதால், அந்த சமயத்தில், தனது கட்டுமான நிறுவனத்தின் அலுவலகமாக விடுதியை பயன்படுத்திக் கொண்டேன். அவர்கள் அறையில் ரகசிய கேமரா வைத்துவிட்டு அதில் பதிவாகும் அவர்களது அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டி அவர்களை என் வழிக்கு கொண்டு வரலாம் என நினைத்தேன்.

cam

இதற்கு முன்பு, கட்டுமான நிறுவனம் நடத்தியபோது தன்னிடம் வேலை பார்த்த 30-க்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசமாக இருந்து அதை வீடியோவில் பதிவு செய்து வைத்திருக்கிறேன். அதுபோலவே, விடுதியில் தங்கி உள்ள பெண்களையும் தனது பாலியல் ஆசைக்கு சம்மதிக்கச் செய்வதற்காக, ரகசிய கேமராக்களை வைத்தேன். இதற்காக, ‘வைஃபை’ மூலம் இயங்கும் 9 நவீன ரக சிறிய கேமராக்களை ஆன்லைன் மூலம் வாங்கியதாகவும், அவற்றின் விலை ரூ 2,500.

pengal

வைஃபை மூலமாக இயக்கி ஆபாச காட்சிகளை பார்க்கும் வசதி கொண்ட இந்த கேமராக்கள், ஆட்கள் நடமாடும் சத்தம் இருந்தால் மட்டுமே காட்சிகளை பதிவு செய்யும் வசதி கொண்டது. பெண்கள் அனைவரும் வேலைக்கு சென்ற பிறகு, குளியல் அறைகள், படுக்கை அறைகளில் நானே சென்று கேமராக்களை ரகசியமாக பொருத்தினேன். என்னால் பெண்களுடன் உல்லாசமாக இருக்காமல் இருக்க முடியவில்லை. அதனால்தான் இந்த விடுதியை தொடங்கி என் ஆசையை தீர்த்து கொள்ளலாம் என நினைத்தேன் ஆனால் சிக்கிக்கொண்டேன் என கூறியுள்ளார்.