பல கோடிகள் மோசடி!  ஐங்கரன் கருணாமூர்த்தி மீது லைக்கா நிறுவனம் புகார்!

 

பல கோடிகள் மோசடி!  ஐங்கரன் கருணாமூர்த்தி மீது லைக்கா நிறுவனம் புகார்!

ஐங்கரன் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் கருணாகரன் மீதும், அந்நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பானு என்பவர் மீதும் இன்று, விஜய், ரஜினி உட்பட பல முன்னணி நடிகர்களை வைத்து படங்களைத் தயாரித்து வரும் லைக்கா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், பல கோடிக்கணக்கான ரூபாய் ஏமாற்றி, சுருட்டி விட்டதாக இன்று கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறது.

ஐங்கரன் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் கருணாமூர்த்தி மீதும், அந்நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பானு என்பவர் மீதும் இன்று, விஜய், ரஜினி உட்பட பல முன்னணி நடிகர்களை வைத்து படங்களைத் தயாரித்து வரும் லைக்கா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், பல கோடிக்கணக்கான ரூபாய் ஏமாற்றி, சுருட்டி விட்டதாக இன்று கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறது.

lyca

இந்த புகாரில், 2014ம் ஆண்டு கத்தி, கோலமாவு கோகிலா உட்பட சிலபடங்களின் மூலமாக தயாரிப்பிலும், பட விநியோகத்திலும் லைக்கா நிறுவனம் ஈடுபட்டு வந்தது. ஆரம்ப கால கட்டங்களில், 2013ம் ஆண்டு, திரையுலகைப் பற்றி அறிந்தவர் என்கிற முறையில் ஐங்கரன் கருணாமூர்த்தி, ஆலோசகராக எங்களுடன் இணைந்தார். அவருடன் எப்போதும் பானு என்பவரும் வருவார். இருவரும் எங்கள் நிறுவனத்தின் சார்பில் எங்கள் அனுமதி பெறாமலேயே வெளியில் படங்களைத் தயாரிப்பதாக அறிவித்து எங்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தியிருக்கிறார்.

ayngaran

லைக்கா தயாரிப்பிலான படங்களின் வெளிநாட்டு உரிமையை எங்கள் அனுமதி இல்லாமல், எந்தவிதமான எழுத்து பூர்வமான ஒப்பந்தமும் எங்கள் நிறுவனத்துடன் போடாமல், அதிக விலைக்கு விற்று விட்டு, எங்களிடம் குறைவான தொகையை கணக்கு காட்டியிருக்கிறார்’ என்று ஐங்கரன் கருணாமூர்த்தி மீதும், பானு மீதும் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி புகாரை லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.