பல கல்லூரி மாணவிகள் தொடர் கற்பழிப்பு!  செல்போனில் வீடியோ எடுத்த இளைஞர் கைது!

 

பல கல்லூரி மாணவிகள் தொடர் கற்பழிப்பு!  செல்போனில் வீடியோ எடுத்த இளைஞர் கைது!

தமிழகத்தில் தொடர் கற்பழிப்புகளும், காதல் என்கிற போர்வையில் வாழ்க்கையைத் தொலைக்கும் கல்லூரி மாணவிகளின் எண்ணிக்கையும் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. இணையதளங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் தங்களைப் பற்றிய விவரங்களை பதிவு செய்து, ஆண்களுடன் சாட் செய்யும் கல்லூரி மாணவிகள், இளம் பெண்களைக் குறி வைத்து வலைவிரித்து காத்திருக்கும் ஆண்களின் வலைகளில் வீழ்ந்து வாழ்க்கையைத் தொலைத்து விடுகிறார்கள்.

தமிழகத்தில் தொடர் கற்பழிப்புகளும், காதல் என்கிற போர்வையில் வாழ்க்கையைத் தொலைக்கும் கல்லூரி மாணவிகளின் எண்ணிக்கையும் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. இணையதளங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் தங்களைப் பற்றிய விவரங்களை பதிவு செய்து, ஆண்களுடன் சாட் செய்யும் கல்லூரி மாணவிகள், இளம் பெண்களைக் குறி வைத்து வலைவிரித்து காத்திருக்கும் ஆண்களின் வலைகளில் வீழ்ந்து வாழ்க்கையைத் தொலைத்து விடுகிறார்கள்.

love

தமிழகத்தையே உலுக்கி எடுத்து அதிர வைத்த பொள்ளாச்சி இளம் பெண்கள் கற்பழிப்பு சம்பவத்தைப் போலவே சேலத்தில் பல கல்லூரி மாணவிகளை காதலிப்பது போல நடித்து தொடர் கற்பழிப்பில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.  சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சபரி அபிஷேக். பட்டப்படிப்பை முடித்திருக்கும் இளைஞரான இவர், சேலம் பகுதிகளில் கல்லூரியில் படித்து வரும் மாணவிகளை ஆசை வார்த்தைகள் கூறி, காதலிப்பது போல் ஏமாற்றி அவர்களிடம் நட்பாக பழகியிருக்கிறார். பின் அவர்களிடம் தொடர்ந்து ஆசை வார்த்தைகள் கூறி நட்சத்திர விடுதிகளுக்கும், வெளியூர்களுக்கும் அழைத்துச் சென்று அவர்களுடன் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டு வந்துள்ளார். தொடர்ந்து பல கல்லூரி மாணவிகளை காதலிப்பது போல நடித்து, இது போல் நட்சத்திர விடுதிகளுக்கும், சொகுசு பங்களாக்களுக்கும் அழைத்துச் சென்று, அவர்களுடன் உறவு வைத்திருந்து, அவர்களுக்குத் தெரியாமல் அதை தனது செல்போனில் வீடியோக்களாகவும் பதிவு செய்து வைத்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில், புது புது காதலிகள் கிடைத்தவுடன், பழைய காதலிகளை, வீடியோக்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டி, பணம் கேட்டு மிரட்டியும் வந்திருக்கிறார். அவர்கள் தருகிற பணத்தை, அடுத்து வரும் புது காதலிகளோடு நட்சத்திர விடுதிகளுக்கு செல்வதற்கு பயன்படுத்தி வந்திருக்கிறார். வீடியோக்களைக் காட்டி, தனது பாலியல் இச்சைக்காகவும்  பலமுறை இந்த கல்லூரி மாணவிகளை மிரட்டி வந்திருப்பதாக தெரிகிறது. சபரியிடம் அப்படி சிக்கிக் கொண்ட ஒரு பெண்ணை சந்திப்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை சேலம் திருவகவுண்டனூர் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது அந்தப் பெண்ணை பின்தொடர்ந்து சென்ற பெண்ணின் பெற்றோர்கள் சபரி அபிஷேக்கை கையும் களவுமாக பிடித்து கண்டித்துள்ளனர். 

women

நடுரோட்டில் நடந்த வாக்குவாதங்களை கவனித்த, அந்த பகுதியில் காவல் பணியிலிருந்த காவலர் ஒருவர், இருதரப்பினரையும் பிடித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளார். விசாரணையில், சபரி அபிஷேக் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், அவனிடம் தன்னுடைய அந்தரங்க காணொலி இருப்பதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். இது தொடர்பான சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமாருக்கு உடனடியாக புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அந்த இளைஞரை கைது செய்தனர். அதன்பின் அந்த இளைஞரின் செல்போனை ஆய்வு செய்ததில், அதில் நூற்றுக்கணக்கானப் பெண்களுடைய ஆபாச புகைப்படங்களும், வீடியோ படங்களும், பல  பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் வல்லுறவு செய்த வீடியோக்களும் இருந்தது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் சேலம் மட்டுமல்லாமல் பல பகுதிகளுக்கும் சென்று, இது போன்று கல்லூரி பெண்களை பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்தி, கற்பழித்ததும் இல்லாமல், அவர்களை மிரட்டி தொடர்ந்து பணம் பறித்து வந்ததும், வாக்கு மூலத்தில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவரின் செல்போனில் இருந்த காணொலிகளை தீவிரமாக ஆராய்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்யப்பட்டது. அதன்பின் அவர் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.