‘பல ஆண்களுடன் பழக்கம்’ பெண்ணை கத்தியால் வெட்டிய உறவினருக்கு தர்ம அடி !

 

‘பல ஆண்களுடன் பழக்கம்’ பெண்ணை கத்தியால் வெட்டிய உறவினருக்கு தர்ம அடி !

கடந்த சில மாதங்களுக்கு முன், மாது துரைராஜ் வீட்டிலிருந்து 5 சவரன் நகையை எடுத்துக் கொண்டு ஓடியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் துரை ராஜ் என்பவரது வீட்டில் அவர் மனைவியின் அக்கா மகள் மாதுவும் வசித்து வந்துள்ளார். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மாற்றுத் திறனாளி ஒருவரைத் திருமணம் செய்து, அவரிடம் இருந்து பிரிந்து வந்து துரைராஜ் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன், மாது துரைராஜ் வீட்டிலிருந்து 5 சவரன் நகையை எடுத்துக் கொண்டு ஓடியுள்ளார். இது குறித்து காவல்துறையினரிடம் துரைராஜ் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில், மாதுவுக்கு பல ஆண்களுடன் பழக்கம் இருந்தது தெரிய வந்துள்ளது. 

ttn

இதனால், மாது மீது கடும் கோபத்திலிருந்த துரைராஜ் அவரை வலைவீசித் தேடி வந்துள்ளார். நேற்று முன் தினம், கோவை மாவட்டம் துடியலூர் அருகே மாது வசித்து வருவதாகத் துரைராஜுக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்குச் சென்ற, துரைராஜ் நேற்று காலை மாதுவை பேருந்து நிலையத்தில் பார்த்துள்ளார். 

ttn

உடனே கையிலிருந்த கத்தியை எடுத்து, மாதுவை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அவரை கையும் களவுமாகப் பிடித்த பொதுமக்கள் அவருக்குத் தர்ம அடி கொடுத்துள்ளனர். அதன் பின், மாதுவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு,  துரைராஜைக் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.