“பலாத்காரம் செஞ்சதை வெளியே சொல்ல பயமாயிருக்கு” -இரண்டு நாளைக்கு பிறகு பெண்ணுக்கு நடந்த பயங்கரம் .

 

“பலாத்காரம் செஞ்சதை வெளியே சொல்ல பயமாயிருக்கு” -இரண்டு நாளைக்கு பிறகு பெண்ணுக்கு நடந்த பயங்கரம் .


17 வயதான பெண்ணை ஒரு ஐந்து பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்ததால் அவர் இரண்டு நாள் கழித்து இறந்து விட்டார் .

“பலாத்காரம் செஞ்சதை வெளியே சொல்ல பயமாயிருக்கு” -இரண்டு நாளைக்கு பிறகு பெண்ணுக்கு நடந்த பயங்கரம் .


உ.பி.யின் ஹமீர்பூரில் வசிக்கும் ஒரு 17 வயதான பெண் கடந்த திங்கள் கிழமை இரவு தன்னுடைய ஊரில் உள்ள சந்தைக்கு சென்று விட்டு தனியாக வந்து கொண்டிருந்தார் .அப்போது அவரை ஒரு காரில் வந்த ஐந்து பேர் அங்குள்ள ஒரு வயலுக்கு தூக்கி சென்று பலாத்காரம் செய்து விட்டு ஓடிவிட்டார்கள் .
அதனால் அந்த பெண் வலியால் துடித்தபடி அந்த வயலில் கிடந்தார் அதன் பிறகு அக்கம்பக்கத்தினர் அந்த பெண்ணை காப்பாற்றி அவரின் தந்தைக்கு தகவல் சொன்னார்கள் ,.அவர் அங்கிருந்து அந்த பெண்ணை அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்கள் .அப்போது அந்த பெண் அவரின் தந்தையிடம் தன்னை ஐந்து பேர் கொண்ட ஒரு கூட்டம் பலாத்காரம் செய்த விஷயத்தை கூறினார் .மேலும் இதை வெளியே சொன்னால் குடும்பத்தைய கொன்று விடுவதாக மிரட்டினார்கள் என்றார் .அதனால் அவர்கள் இதை போலீசில் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தார்கள் .
ஆனால் அந்த பெண் கடந்த புதன் கிழமையன்று சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார் .அதன் பிறகு அந்த பெண்ணின் தந்தை போலீசில் தன்னுடைய மகளுக்கு நேர்ந்த பலாத்கார கொடுமையை கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பலாத்கார குற்றத்தை புரிந்த கூட்டத்தை தேடி வருகிறார்கள் .இது பற்றி போலீசார் கூறுகையில் “இறந்த பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம், மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது,” என்று கூறினார்கள் .

“பலாத்காரம் செஞ்சதை வெளியே சொல்ல பயமாயிருக்கு” -இரண்டு நாளைக்கு பிறகு பெண்ணுக்கு நடந்த பயங்கரம் .