‘பலாத்காரம் என்பதே இல்லை.. பெண்களின் விருப்பப்படியே நடக்கிறது’ – பிரபல நடிகை சர்ச்சை பேச்சு

 

‘பலாத்காரம் என்பதே இல்லை.. பெண்களின் விருப்பப்படியே நடக்கிறது’ – பிரபல நடிகை சர்ச்சை பேச்சு

Me Too ஹேஸ்டேக் மூலம் எந்தவித நன்மையும் நடக்கப் போவதில்லை என பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷிண்டே தெரிவித்துள்ளார்.

மும்பை: Me Too ஹேஸ்டேக் மூலம் எந்தவித நன்மையும் நடக்கப் போவதில்லை என பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷிண்டே தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக அமேரிக்கா தொடங்கி இந்தியா வரை சமூகவலைதளங்களில் புயலை வீசி வருகிறது ‘Me Too’ என்ற ஹேஸ்டேக். பெண்களுக்கு தனிமையில் பாலியல் தொந்தரவுகளை கொடுக்கும் நபர்களின் முகத்திரையை பொதுவெளியில் கிழிப்பதற்காகவே அந்த ஹேஸ்டேக் தொடங்கப்பட்டது.

அந்த ஹேஸ்டேக் பல நம்ப முடியாத முக்கிய பிரபலங்களின் பிம்பங்களை சுக்குநூறாக நொறுங்கியுள்ளது. பாலிவுட் மட்டுமல்லாது, தமிழ் திரையுலகிலும் அந்த ஹேஸ்டேக் புயலை வீசி வருகிறது.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷிண்டே, “MeToo ஹேஸ்டேக்கால் எதுவும் நடக்கப் போவதில்லை. தொடர்ந்து இதுபோன்ற பாலியல் அத்துமீறல்கள் நடைபெறத்தான் செய்யும். சினிமா துறையை போன்று அனைத்து துறைகளிலும் இதுபோன்ற பாலியல் அத்துமீறல்கள் நடைபெறும் போது, திரைத்துறையைச்  சேர்ந்தவர்கள் தங்கள் துறையைச் சேர்ந்தவர்களின் பெயரை வெளியிடுவதால் அந்த துறைக்குத் தான் கெட்ட பெயர் ஏற்படுகிறது. 

சினிமா துறையில் யாரும் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதில்லை, மாறாகப் பெண்களின் விருப்பத்தின் பேரிலேயே அனைத்தும் நடைபெறுகிறது. அத்துமீறல் நடைபெறும் போது கூறாமல், நீண்ட நாட்களுக்குப் பிறகு கூறுவது ஏன்?” என தெரிவித்துள்ளார்.

ஷில்பா ஷிண்டேவின் இந்த பேச்சு பாலிவுட் திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், கடந்த சில நாட்களுக்கு முன் தனது பட தயாரிப்பாளர் மீது ஷில்பா ஷிண்டே பாலியல் புகார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.