“பலாத்காரத்தை ஓரமா உக்காந்து வேடிக்கை பாக்குறியே..” -ஒரு பெண்ணின் முன்பு பெண்ணுக்கு நடந்த கொடுமை.

 

“பலாத்காரத்தை ஓரமா உக்காந்து வேடிக்கை பாக்குறியே..” -ஒரு பெண்ணின் முன்பு பெண்ணுக்கு நடந்த கொடுமை.


கேட்டரிங் பணிக்கு சென்ற ஒரு பெண்ணை அந்த கேட்டரிங் கான்ட்ராக்டரும் அவரின் நண்பரும் சேர்ந்து ஒரு பெண் முன்பு பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது .

“பலாத்காரத்தை ஓரமா உக்காந்து வேடிக்கை பாக்குறியே..” -ஒரு பெண்ணின் முன்பு பெண்ணுக்கு நடந்த கொடுமை.


அகமதாபாத்தின் நரோல் பகுதியில் உள்ள அக்ருதி டவுன்ஷிப் என்ற அடுக்கு மாடி குடியிருப்பில் மும்பையைச் சேர்ந்த பத்தொன்பது வயது பெண் வசித்து வந்தார் .இவர் அங்குள்ள ஒரு கேட்டரிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் .அந்த நிறுவனம் பல விசேஷங்களுக்கு சென்று கேட்டரிங் பணியை செய்து வருகிறது . சென்ற ஞாயிற்றுக்கிழமை ஒரு கேட்டரிங் நிகழ்ச்சிக்கு அந்த பெண் பணிப்பெண்ணாக வேலைக்குச் சென்றிருந்தார்.அப்போது அன்று இரவு அந்த கேட்டரிங் ஒப்பந்தக்காரரும் , அவரது நண்பரும் அவரின் தோழியோடு அங்கு வந்தார்கள் .அதன் பிறகு அவர்கள் அனைவரும் அந்த பிளாட்டிலேயே மது அருந்தினார்கள் .
அதன் பிறகு அங்கு அவர்களோடு தங்கியிருந்த அந்த 19 வயதான பெண்ணை அவர்களிருவரும் பாலியல் பலாத்காரம் செய்தார்கள் .இந்த காட்சியை அவர்களோடு உடன் வந்த ஒரு பெண் தோழி வேடிக்கை பார்த்ததை கண்ட அவர், அந்த பெண்ணிடம் காப்பாற்றுமாறு கெஞ்சினார் .
ஆனால் அதை சற்றும் பொருட்படுத்தாத அந்த பெண் சந்தோஷமாக அந்த பலாத்காரத்தை ரசித்துகொண்டிருந்தார் .அதன் பிறகு அந்த பெண் இந்த விஷயத்தை அங்குள்ள காவல் நிலையத்தில் சென்று புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார்கள் .அதன் பிறகு அவர்கள் பலாத்காரம் செய்த கேட்டரிங் ஒப்பந்தக்காரர் சாஹில் ஷேக்கையும் , அவரது நண்பர் தஸ்கீல் குரேஷியையும் ,உடனிருந்த ஒரு பெண்ணையும் கைது செய்தார்கள் .

“பலாத்காரத்தை ஓரமா உக்காந்து வேடிக்கை பாக்குறியே..” -ஒரு பெண்ணின் முன்பு பெண்ணுக்கு நடந்த கொடுமை.