பலாத்காரத்துக்குள்ளான தாய் -பிளாட்பாரத்தில் விடப்பட்ட மகன் -27 ஆண்டுக்கு பிறகு பழி வாங்கினார்

 

பலாத்காரத்துக்குள்ளான தாய் -பிளாட்பாரத்தில் விடப்பட்ட மகன் -27 ஆண்டுக்கு பிறகு பழி வாங்கினார்

பலாத்காரத்தில் பிறந்த மகன் ,27 ஆண்டுக்கு பிறகு தன்னுடைய தந்தையை கண்டுபிடித்து பழிவாங்கிய சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

பலாத்காரத்துக்குள்ளான தாய் -பிளாட்பாரத்தில் விடப்பட்ட மகன் -27 ஆண்டுக்கு பிறகு பழி வாங்கினார்

சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்பு, உத்திரபிரதேச மாநிலம் உதம்பூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு  12 வயதாக இருக்கும்போது  , அவர் தனது சகோதரி மற்றும் மைத்துனருடன்  வசித்து வந்தார். ஒரு நாள் அவர் தனியாக அந்த வீட்டில்  இருந்தபோது,அந்த  வீட்டிற்குள் நுழைந்து அவரை அதே ஊரை சேர்ந்த உறவினர் இருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்கள் .இதனால் அவர் தனது 13 வயதில் கர்ப்பமாகி 1994 இல் ஒரு ஆண் குழந்தையை  பெற்றெடுத்தார். இதனால் அவர் திருமணமாகாமல் பெற்ற  அந்த  குழந்தையை எப்படி ஊருக்குள் எடுத்து செல்வது என்று விழித்து அதை பிளாட்பாரத்தில் வீசி விட எண்ணினார் .அப்போது   அந்த குழந்தையை  அதே ஊரை  சேர்ந்த ஒருவர் தான் வளர்ப்பதாக வாங்கி சென்றார் .அதன் பிறகு அந்த பெண்  தனது மைத்துனருடன் ஷாஹாபாத் பகுதியில் உள்ள  ராம்பூருக்கு குடிபெயர்ந்தார்

பிறகு அந்த பெண்ணின்  மைத்துனர் காசிப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒருவருக்கு அந்த பெண்ணை திருமணம் செய்து வைத்தார் .ஆனால் அவருக்கு மணமாகி  10 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் ஏற்கனவே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ஒரு குழந்தைக்கு தாயானவர் என்று அவரது கணவர் அறிந்ததும், அவர் அந்த பெண்ணை  விவாகரத்து செய்தார்.இதனால் அவர் தன்னுடைய சொந்த ஊரான  உதம்பூருக்கு திரும்பினார் .இதற்கிடையில், அந்த பெண்ணின் குழந்தை இப்போது பெரியவனாக வளர்ந்து விட்டான் .இப்போது  ஊரார் மூலம் தனது தாயை பற்றி அறிந்து கொண்ட அந்த வாலிபர்  அவரிடம்   தன்னுடைய  தந்தையைப் பற்றி விசாரித்தான்,

அதனால் அந்த  வாலிபரிடம் அந்த பெண் அவரின் தந்தையை பற்றி கூறினார் . அதை கேட்டு கோபமுற்ற அந்த வாலிபர் வெள்ளிக்கிழமை மாலை, சதர் பஜார் காவல் நிலையத்தில் தன்னுடைய தாயை பலாத்காரம் செய்த  இருவர் மீதும் புகாரளித்தார் .அவர் அளித்த புகாரின் அடிப்படையில்  வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பலாத்காரத்துக்குள்ளான தாய் -பிளாட்பாரத்தில் விடப்பட்ட மகன் -27 ஆண்டுக்கு பிறகு பழி வாங்கினார்