பலம், பலவீனத்தை உணர்ந்து முடிவெடுத்த ரஜினி – தயாநிதி மாறன் வரவேற்பு

 

பலம், பலவீனத்தை உணர்ந்து முடிவெடுத்த ரஜினி – தயாநிதி மாறன் வரவேற்பு

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து முடிவு எடுத்திருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.சென்னை சௌகார்பேட்டையில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியைத் தொகுதி எம்.பி-யும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு, ஆர்.டி.சேகர் உள்ளிட்டோர் தொடங்கிவைத்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து முடிவு எடுத்திருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
சென்னை சௌகார்பேட்டையில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியைத் தொகுதி எம்.பி-யும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு, ஆர்.டி.சேகர் உள்ளிட்டோர் தொடங்கிவைத்தனர்.

dyan

பின்னர் தயாநிதி மாறனிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அப்போது அவர், “நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய பலம் எது, பலவீனம் எது என ஆராய்ந்தே முடிவு எடுத்துள்ளார். அவரது முடிவை வரவேற்கிறோம்” என்றார். ரஜினி பற்றியே தொடர்ந்து கேள்வி கேட்டதால், “ரஜினி வரலைன்னு சொல்லிட்டாருல்ல… விட்டுருங்க. எங்கிருந்தாலும் வாழ்த்துக்கள்” என்றார்.