பலத்த காற்று காரணமாக அரசு பேருந்தின் மேற்கூரை பறந்தது! பொள்ளாச்சியில் பரபரப்பு!

 

பலத்த காற்று காரணமாக அரசு பேருந்தின் மேற்கூரை பறந்தது! பொள்ளாச்சியில் பரபரப்பு!

பொள்ளாச்சி அருகே அரசுப் பேருந்தின் மேற்கூரை காற்றின் வேகம் காரணமாகக் கழன்று விழுந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே அரசுப் பேருந்தின் மேற்கூரை காற்றின் வேகம் காரணமாகக் கழன்று விழுந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் வடக்கிபாளையத்தில் இருந்து பொள்ளாச்சிக்குச் சென்று கொண்டு இருந்த அரசு பேருந்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்து வந்தனர். அப்போது கொங்குநாட்டன்புதூர் பிரிவு வழியாக சென்று கொண்டு இருந்த போது பலத்த காற்று வீசியது. அப்போது காற்றின் வேகத்தில் பேருந்தின் மேற்கூரை பெயர்ந்து பறந்து கீழே விழுந்தது. இதனைக் கண்ட பயணிகள் பயத்தில் அலறினர்.

இதையடுத்து, ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். இதில் அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதன்பின்னர் மேற்கூரையைச் சரி செய்வதற்காக, அப்பேருந்து பொள்ளாச்சி பணிமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவமானது பொள்ளாச்சி மக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.