பற்றி எரியும் டெல்லி! போராட்டத்தில் 10 பேர் உயிரிழப்பு

 

பற்றி எரியும் டெல்லி! போராட்டத்தில் 10 பேர் உயிரிழப்பு

டெல்லியில் சிஏஏவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த மாதம்  நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக ஓய்ந்திருந்த போராட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் பற்றி எரிய ஆரம்பித்தது. போராட்டக்காரர்களை ஒடுக்க காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு வீச்சுகளை வீசினர். இருப்பினும் போராட்டம் ஓய்ந்த பாடில்லை.

Delhi CAA Clashes

இதனால் 144 சட்டம் பிறப்பிக்கப்பட்டது.  தடையை மீறி போராட்டம் நடத்துபவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள் மீது குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து போலீசார் தலையிட்டு கலவரகாரர்களை விரட்டி அடித்தனர். இந்த சம்பவத்தில் 6 போலீசார் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. வன்முறையில் காயமடைந்தவர்களை அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர்  மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்தனர்.