பர்ஸ் பத்திரம்: மீண்டும் வருகிறது ஃபிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டே சேல்!

 

பர்ஸ் பத்திரம்: மீண்டும் வருகிறது ஃபிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டே சேல்!

 இப்போது தான் தீபாவளியையொட்டி மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் திருவிழாவை போட்டிப்போட்டு நடத்தின அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட். தற்போது மீண்டும் பிக் ஷாப்பிங் டே என்ற பெயரில் மிகப்பெரிய விற்பனையை ஃபிளிப்கார்ட் அறிவித்துள்ளது.
டிசம்பர் 1ம் தேதி தொடங்கி ஐந்து நாட்கள் இந்த விற்பனை நடைபெற உள்ளதாம்.

 இப்போது தான் தீபாவளியையொட்டி மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் திருவிழாவை போட்டிப்போட்டு நடத்தின அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட். தற்போது மீண்டும் பிக் ஷாப்பிங் டே என்ற பெயரில் மிகப்பெரிய விற்பனையை ஃபிளிப்கார்ட் அறிவித்துள்ளது.
டிசம்பர் 1ம் தேதி தொடங்கி ஐந்து நாட்கள் இந்த விற்பனை நடைபெற உள்ளதாம்.

flipkart

இந்த விற்பனையின்போது, ரியல்மி 5, சாம்சங் கேலக்ஸி எஸ்9, ஆப்பிள் ஐபோன் 7 உள்ளிட்ட பல மொபைல் போன்கள் டிஸ்கவுண்ட் சேல் செய்யப்பட உள்ளதாம். இது தவிர, டி.வி உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், லேப்டாப், கேமராக்களுக்கு 75 சதவிகிதம் வரை தள்ளுபடி அளிக்கப் போகிறார்களாம்.

offer

இந்த முறை எச்.டி.எஃப்.சி கிரெடிட், டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. 10 சதவிகிதம் உடனடி தள்ளுபடி இந்த கார்டுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 
வழக்கமாக அமேசான் முதலில் ஷாப்பிங் திருவிழாவை அறிவிக்கும். அதைத் தொடர்ந்து ஃபிளிப்கார்ட் தன்னுடைய பிக் ஷாப்பிங் சேலை அறிவிக்கும்

card

.

இந்த முறை ஃபிளிப் கார்ட் முந்தியுள்ளது. ஃபிளிப்கார்ட்டை சமாளிக்க அமேசானும் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் டிசம்பர் முதல் வாரத்தில் அதை எங்காவது மறைத்து வைத்துவிடுவது நல்லது. இல்லையென்றால் தேவையற்ற பொருட்களை வாங்கி பிறகு கிரெடிட் கார்ட் பில் கட்ட பணம் இல்லாமல் அவஸ்தைப் பட வேண்டியதுதான்!