பர்கினோ ஃபசோ நாட்டில் மர்ம நபர்கள் சரமாரி துப்பாக்கிச்சூடு – 24 பேர் பரிதாப பலி!

 

பர்கினோ ஃபசோ நாட்டில் மர்ம நபர்கள் சரமாரி துப்பாக்கிச்சூடு – 24 பேர் பரிதாப பலி!

பர்கினோ ஃபசோ நாட்டில் மர்ம நபர்கள் நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூட்டில் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஒவ்கடங்கு: பர்கினோ ஃபசோ நாட்டில் மர்ம நபர்கள் நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூட்டில் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பர்கினோ ஃபசோ நாட்டின் ஷஹீல் பகுதியின் யஹா மாகாணம் பென்சி கிராமத்திற்குள் நேற்று முன்தினம் நுழைந்த மர்ம நபர்கள் சிலர், அங்கு இருந்த தேவாலயத்தில் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த திடீர் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன் 18 பேர் படுகாயமடைந்தனர். இந்த தகவலை அம்மாநில ஆளுநர் தெரிவித்தார்.

ttn

இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து தகவலறிந்து வந்த போலீசார் தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். பர்கினோ ஃபசோ நாட்டில் அல்கொய்தா, ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதனால் அரசு ராணுவ படைக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி சண்டை நிகழும். இதனால் அந்நாட்டில் உள்ள பொதுமக்கள் நிம்மதியின்றி அச்சத்துடனே வசித்து வருகின்றனர்.