பரோட்டா விலை கேட்டு தகராறு செய்த சிறுவன் உள்ளிட்ட 7 பேர் கைது!

 

பரோட்டா விலை கேட்டு தகராறு செய்த சிறுவன் உள்ளிட்ட 7 பேர் கைது!

உணவகம் ஒன்றில் பரோட்டா விலை கேட்டு கலாட்டா செய்த ஜான்பாண்டியன் கட்சியினை சேர்ந்த சிறுவன் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். 

சென்னை: உணவகம் ஒன்றில் பரோட்டா விலை கேட்டு கலாட்டா செய்த ஜான்பாண்டியன் கட்சியினை சேர்ந்த சிறுவன் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். 

சென்னை குரோம்பேட்டை  உணவகம் ஒன்றில் பரோட்டோவின் விலை 25 ரூபாய் என கூறியதால், ஆத்திரமுற்ற தமிழக மக்கள் முன்னேற்றக் கழக கட்சியை சேர்ந்தவர்கள், கடைக்காரரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. அதனால், கடைக்காரருக்கும், அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறி போனது. இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த குரோம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  சிறுவன் உட்பட ஏழு பேரை கைது செய்தனர். சிறுவனை செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்திலும், இதர 6 பேரை புழல் சிறையிலும் அடைத்தது குறிப்பிடத்தக்கது.