பருத்திவீரன் ‘சித்தப்பா’-க்கு பன்றி காய்ச்சல்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

 

பருத்திவீரன் ‘சித்தப்பா’-க்கு பன்றி காய்ச்சல்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

பிரபல குணச்சித்திர நடிகர் சரவணனுக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை: பிரபல குணச்சித்திர நடிகர் சரவணனுக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

நடிகர் கார்த்தியின் ‘பருத்துவீரன்’ திரைப்படத்தில் கார்த்திக்கு சித்தப்பா வேடத்தில் நடித்து பிரபலமடைந்தவர் சரவணன். தன் இயல்பான நடிப்பின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற அவர், சமீபத்தில் வெளியாகிய ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திலும் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை கொண்டாட தன் சொந்த ஊரான சேலத்திற்கு குடும்பத்துடன் சென்றிருந்த சரவணனுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் குணமாகாததையடுத்து, சேலம் மருத்துவமனைக்கு சென்று சோதித்துப் பார்த்ததில் சரவணனுக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சரவணன் குடும்பத்தார், மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சரவணனை அழைத்து வந்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 

மேலும், தான் தைரியமாக இருப்பதாகவும், விரைவில் காய்ச்சல் குணமடைந்து வீடு திரும்புவேன் என்றும் சரவணனே கூறியதாக அவருக்கு நெருங்கிய திரைத்துறை நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.