பராமரிப்பு பணி காரணமாகப் பல சென்னை புறநகர் ரயில்கள் ரத்து!

 

பராமரிப்பு பணி காரணமாகப் பல சென்னை புறநகர் ரயில்கள் ரத்து!

சென்னை கடற்கரை முதல் செங்கல் பட்டு வரையிலும் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னை கடற்கரை முதல் செங்கல் பட்டு வரையிலும் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் தினந்தோறும் ஆயிரக் கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். தண்டவாளத்தில் அவ்வப்போது நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக ஒரு சில ரயில்கள் ரத்து செய்யப்படும். அதே போல இன்று செங்கல்பட்டு பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் சில ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

ttn

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, அரக்கோணம் வரை செல்லும் 40521. 40900,40523,40525,40527, 40529, 40531 ஆகிய தட எண்கள் கொண்ட 7 ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. மேலும், செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி மற்றும் சென்னை கடற்கரை வரை செல்லும் 42501,40530,40532,40534,40536, 40538, 40540  ஆகிய தட எண்கள் கொண்ட 7 ரயில்களும் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளது.