பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்சார ரயில்கள் ரத்து!

 

பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்சார ரயில்கள் ரத்து!

நாளை ஞாயிற்றுக்கிழமை (செப்.8) பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக சென்னை கடற்கரையில் இருந்து செல்லும் ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளன. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், காலை 8 மணி முதல் 1.40 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

நாளை ஞாயிற்றுக்கிழமை (செப்.8) பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக சென்னை கடற்கரையில் இருந்து செல்லும் ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளன. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், காலை 8 மணி முதல் 1.40 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதே சமயம் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு பிற்பகல் 2 மணி முதல் மீண்டும் ரயில்கள் இயக்கப்படும்.  வேளச்சேரியில் இருந்து காலை 8.10 முதல்  1.50 மணி வரை சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. 

electric train

வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 2.10 மணி முதல் மீண்டும் ரயில்கள் இயக்கப்படும்.  முன்னதாக, சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் என்று ஏற்கனவே தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. ஆனால். பராமரிப்பு பணிகள் நடைபெறாத காரணத்தால் இந்த வழிதடத்தில், மின்சார ரயில்கள் வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி ரயில்கள்  இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.