பராமரிப்புப் பணிக்காக சென்னையில் நாளை ஒரு நாள் மின்வெட்டு! – மின்வாரியம் அறிவிப்பு

 

பராமரிப்புப் பணிக்காக சென்னையில் நாளை ஒரு நாள் மின்வெட்டு! – மின்வாரியம் அறிவிப்பு

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் நாளை மின்வெட்டு ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை: மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் நாளை மின்வெட்டு ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக நாளை (12.10.2018) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னையின் பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தாம்பரம்: வேங்கைவாசல் மெயின் ரோடு, சிவகாமி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, கௌரிவாக்கம், பிரின்ஸ் காலேஜ், பழனியப்பா நகர், சந்தானம்மாள் நகர்.

கொரட்டூர்: யு.ஆர். நகர், ருக்மணி தெரு, பார்க் ரோடு, குப்புசாமி தெரு, பாலாஜி நகர், பாண்டுரங்காபுரம், கவிதா தெரு, ஜெமி காம்பவுண்டு.

பம்மல்: வெங்கடேஸ்வரா தெரு 1, 2, 3-வது அகஸ்தீஸ்வரர் தெரு 1,2,3-வது தெரு வனஜா நகர், பாரதி நகர், பொழிச்சலூர் மெயின் ரோடு, எச்.எல்.காலனி, நல்லதம்பி ரோடு பகுதி, ராதா கிருஷ்ணான் சாலை, லஷ்மி நகர் ஒரு பகுதி.

மண்ணடி: மண்ணடி தெரு, ஆர்மேனியன் தெரு, கச்சாலீஸ்வரர் அக்ரஹாரம் தெரு, போஸ்ட் ஆபிஸ் தெரு, முத்துமாரி செட்டி தெரு, வேங்கடமேஸ்திரி தெரு, ஐய்யப்ப செட்டி தெரு, செம்புதாஸ் தெரு, சவுரிமுத்து தெரு, புதுத் தெரு, நைனியப்பா தெரு, தம்பு செட்டி தெரு, ஜாஃபர் சரங் தெரு, அங்கப்பன் தெரு, நாயக்கர் தெரு, ஆதாம் தெரு, ராஜாஜி சாலை, கோபால் செட்டி தெரு,  3 மற்றும் 4-வது கடற்கரை சாலை,  லிங்கி செட்டி தெரு, மலையபெருமாள் தெரு, பவளக்காரத் தெரு, நைநியப்ப தெரு, சாலை விநாயகர் தெரு, சைவ முத்தைய தெரு, பிராட்வே, இப்ராகிம் தெரு, ஆடியபாதம் தெரு, மூர் தெரு, கிருஷ்ணன் கோயில் தெரு.

மேற்கண்ட இடங்களில், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வெட்டு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.