பரப்பனஅக்ரஹாரத்தில் விஷம் குடித்த சசிகலா -மனஉளைச்சலால்  பாதிக்கப்பட்டதாக பரபரப்பு புகார்.. 

 

பரப்பனஅக்ரஹாரத்தில் விஷம் குடித்த சசிகலா -மனஉளைச்சலால்  பாதிக்கப்பட்டதாக பரபரப்பு புகார்.. 

பெங்களூரு பரப்பன அக்ராஹார பகுதியில் வசிக்கும் சசிகலா என்ற 28 வயது பெண்ணும் ஸ்ரீநாத் என்ற வாலிபரும் ‘லிவிங் டுகெதர்’ ஆக பல மாதங்கள் வாழ்ந்துள்ளனர், பிறகு சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் இருவரும் அங்குள்ள ஒரு கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

பெங்களூருவில் கல்யாணம் செய்யாமல் பலமாதங்கள் வாழ்ந்து விட்டு, கல்யாணம் ஆனதும் அம்போவென விட்டு ஓடிய கணவனால் மனமுடைந்த பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
பெங்களூரு பரப்பன அக்ராஹார பகுதியில் வசிக்கும் சசிகலா என்ற 28 வயது பெண்ணும் ஸ்ரீநாத் என்ற வாலிபரும் ‘லிவிங் டுகெதர்’ ஆக பல மாதங்கள் வாழ்ந்துள்ளனர், பிறகு சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் இருவரும் அங்குள்ள ஒரு கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதற்கு பிறகு சிலநாட்கள் அவர்கள் தாயுடன் ஒரு வீட்டில் குடியிருந்துள்ளனர்.
திடீரென ஸ்ரீநாத்தும் அவரது அம்மாவும் அவரை தனியாக  விட்டு விட்டு ஓடி விட்டனர். அதனால் சசிகலா அவருடன் தொடர்பு கொள்ள முயன்றும் அவர் பேசவில்லை . பல மாதங்கள் பொறுத்து  பார்த்த சசிகலா வெள்ளிக்கிழமையன்று பூச்சிமருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். கவலைக்கிடமான நிலையில் இருந்த சசிகலாவை அவரது வீட்டு உரிமையாளர் மருத்துவமனையில் சேர்த்தார், இப்போது அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்படுகிறது, அப்பெண்  ஸ்ரீநாத் மீதும், அவரது அம்மா  மீதும் புகார் கொடுத்துள்ளார் இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.