பரபரப்பான தேர்தல் களம்: வாழ்வில் உங்களுக்கு சக்தி கிடைக்க வேண்டுமா? இதை செய்யுங்கள்: சூப்பர் ஸ்டாரின் அட்வைஸ்!

 

பரபரப்பான தேர்தல் களம்: வாழ்வில் உங்களுக்கு சக்தி கிடைக்க வேண்டுமா? இதை செய்யுங்கள்: சூப்பர் ஸ்டாரின் அட்வைஸ்!

உண்மையான நம்பிக்கையும் பக்தியும் வைத்து யோக பயிற்சியை மேற்கொண்டால் நமக்கும் சக்திகள் கிடைக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னை: உண்மையான நம்பிக்கையும் பக்தியும் வைத்து யோக பயிற்சியை மேற்கொண்டால் நமக்கும் சக்திகள் கிடைக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ரஜினியின் அரசியல் பிரவேசம்

rajini

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் களம்  பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்தே, தமிழக அரசியல் களமும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. குறிப்பாக திரைத்துறையிலிருந்து அரசியல் களத்தில் காலடி வைத்துள்ள கமல், தீவிரமாக பிரசாரம்  மேற்கொண்டு வருகிறார். ஆனால் ரஜினியின்  அரசியல் பிரவேசமோ, இன்னும் கிணற்றில் போட்ட கல் மாதிரியே தான் உள்ளது.

புத்தக வெளியீட்டு விழா

 

இந்நிலையில் பரமஹம்ச யோகானந்தர் குறித்த ‘ஒரு யோகியின் சுயசரிதம்’, ஒலி வடிவ புத்தக வெளியீட்டு விழா, சென்னை தி.நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது பேசிய ரஜினிகாந்த், ‘ இந்த புத்தகம் ஆன்மிக உலகத்தையே புரட்டிப் போட்ட புத்தகம் . அதனால் அனைவரும் நம்பிக்கையோடு, பக்தியோடு புத்தகத்தில் இருப்பதைப் பின்பற்றினால், கோபம் குறைந்து வாழ்க்கையில் துன்பத்தின் தாக்கம் இருக்காது’ என்றார். 

சக்தி கிடைக்க வேண்டுமா?

rajini

இதையடுத்து அரசியல் குறித்து கேள்வி எழுப்ப அங்கு செய்தியாளர்கள் கூடியிருந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி,  ‘கடவுளின் மீது உண்மையான நம்பிக்கையும் பக்தியும் வைத்து யோக பயிற்சியை மேற்கொண்டால் நமக்கும் சக்திகள் கிடைக்கும். ஆடியோ புத்தகத்தைக் கேட்டு, அனைவரும் பயனடைய வேண்டும். அமைதிதான் முக்கியம். மக்கள் இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு அமைதியை நோக்கிச் செல்ல வேண்டும்’ என்று கூறி வேகமாக காரில் ஏறிப் புறப்பட்டுச் சென்றார். 

தேர்தல் நேரத்தில் ரஜினி அரசியல் பற்றி பேசி, தேர்தல் களத்தைக்  கூடுதல் பரபரப்பாக மாற்றுவார்  என்று எதிர்பார்த்த நிலையில் அவரின் அமைதியான ஆன்மீக அட்வைஸ் அனைவரையும் திக்குமுக்காடச் செய்தது. 
 

இதையும் வாசிக்க: ஜொமோட்டோ ஊழியரை வேலையை விட்டு நீக்கிய நிறுவனம் : கேஸ் போடுவோம் என்று மிரட்டல்!