பரபரப்பான தேர்தல் களமும் , பொள்ளாச்சி விவகாரமும்: கூலாக ஐபிஎல் பார்க்க வந்த ரஜினி; புலம்பும் ரஜினி மக்கள் மன்றத்தினர்!?

 

பரபரப்பான தேர்தல் களமும் , பொள்ளாச்சி விவகாரமும்: கூலாக ஐபிஎல் பார்க்க வந்த ரஜினி; புலம்பும் ரஜினி மக்கள் மன்றத்தினர்!?

அனல்பறக்கும் தேர்தல் களத்திற்கு மத்தியில்,  ஐபிஎல் போட்டியைக் காண நடிகர்  ரஜினிகாந்த் சேப்பாக்கம் மைதானத்துக்கு வந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: அனல்பறக்கும் தேர்தல் களத்திற்கு மத்தியில்,  ஐபிஎல் போட்டியைக் காண நடிகர்  ரஜினிகாந்த் சேப்பாக்கம் மைதானத்துக்கு வந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ஐபிஎல் கிரிக்கெட் தொடர்

rajini

சென்னையில்  12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்றுத் தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதின. 

மைதானத்துக்கு வந்த  ரஜினிகாந்த்

rajini

இந்நிலையில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  கிரிக்கெட் போட்டியைக் காண சேப்பாக்கம் மைதானத்துக்கு வந்திருந்தார். பின்னர் ரசிகர்களுடன் போட்டியை அவர் கண்டு களித்தார். முக்கிய கிரிக்கெட் போட்டிகளைத் தவறாமல் நேரில் போய் பார்ப்பது ரஜினியின் வழக்கம். அந்த வகையில் ஐபிஎல் 12வது சீசனின் எதிர்பார்ப்புக்குரிய இந்த முதல் ஆட்டத்தை நேரில் பார்க்க வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எங்க போனீங்க ரஜினி 

rajini

இது ஒருபுறமிருக்க  நாடாளுமன்ற, இடைத்தேர்தல் நெருங்கி வரும் அனைத்து கட்சிகளும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றது. இன்னும் சொல்ல போனால் ரஜினிக்கு பிறகு கட்சி ஆரம்பித்த கமல், தேர்தல் களத்தில் இயங்கி கொண்டிருக்கிறார்.ஆனால்  ரஜினியோ போர் வரட்டும் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு இப்படி கிரிக்கெட் போட்டியை பார்க்க கூலாக வந்து செல்வது அவரை நம்பி ரஜினி மக்கள் மன்றத்தில் சேர்ந்த  தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகவோ, அல்லது அதை எதிர்த்தோ குரல் கொடுக்காமல் மவுனம் காத்து வருவது எதிர்காலத்தில் ரஜினியின், அரசியல் வாழ்க்கையையே கேள்வி குறியாக்கி விடும் என்று ரஜினி மக்கள் மன்றத்தினர் புலம்பி வருகின்றனர். 

 

மேலும் படிக்க: ‘குஷ்பூவும், திருநாவுக்கரசரும் ஒரேநாள் இரவில் கூட்டணி’ : அ.தி.மு.க அமைச்சர் கொச்சை விமர்சனம்!