பரனூர் சுங்கச்சாவடி பணம் கொள்ளை… 4 இளைஞர்களைக் கைது செய்த காவல்துறை !

 

பரனூர் சுங்கச்சாவடி பணம் கொள்ளை… 4 இளைஞர்களைக் கைது செய்த காவல்துறை !

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த 26 ஆம் தேதி நள்ளிரவு சுங்கச்சாவடி ஊழியருக்கு பஸ் டிரைவருக்கும் தகராறு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த 26 ஆம் தேதி நள்ளிரவு சுங்கச்சாவடி ஊழியருக்கு பஸ் டிரைவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த ஊழியர் டிரைவரை தாக்கியதால் அங்குத் திரண்ட பஸ் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் டிரைவர்கள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியதில் கண்ணாடிக் கதவுகள், தடுப்பு குழாய்கள், கேபிள்கள் என அனைத்தும் சேதம் அடைந்தன. அதுமட்டுமில்லாமல் அங்கு இருந்த பணத்தையும் வாரி இறைத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், தடியடி நடத்தி அங்கிருந்த அனைவரையும் அனுப்பி வைத்தனர். 

ttn

இதனையடுத்து, அந்த போராட்டத்திற்குப் பிறகு அன்று வசூலான ரூ.18 லட்சம் காணாமல் போகியுள்ளதாகச் சுங்கச்சாவடி ஊழியர் விஜயபாபு புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த பணத்தைச் சுங்கச் சாவடி ஊழியர்களே திருடியது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து சுங்கச் சாவடி ஊழியர்கள் பூபதிராஜா, செந்தில்குமார், ஜெயவிஜயன் மற்றும் மாரிமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்த 30 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.