பயந்து படப்பிடிப்பில் இருந்து பாதியில் ஓடிய நடிகை அனுபமா: காரணம் என்ன?

 

பயந்து படப்பிடிப்பில் இருந்து பாதியில் ஓடிய நடிகை அனுபமா: காரணம் என்ன?

கொடைக்கானல் : உயரமான மலைப்பகுதியைக் கண்டு படப்பிடிப்பில் இருந்து நடிகை அனுபமா பிரகாஷ் ஓடிச் சென்ற சம்பவம் படக்குழுவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

நடிகர்கள் பூவரசு, அனுபமா பிரகாஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் ‘அவளுக்கென்ன அழகிய முகம்’. இயக்குநர் ஏ.கேசவன் இயக்கி வரும் இப்படத்தைக் கதிரவன் ஸ்டுடியோஸ் தயாரித்து வருகிறது.  இப்படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். 

 

இந்நிலையில் இப்படத்தின் பாடல் காட்சிளை படமாக்கப் படக்குழு  கொடைக்கானல் சென்றது. நடன இயக்குநர் ஷங்கர் மலைப் பகுதியில் பாடல் காட்சி படமாக்கப் பட இருந்த நிலையில்  நடிகை அனுபமா பிரகாஷ், உயரத்தைக் கண்டு பயந்துள்ளார். இதனால் பயத்தை போக்கச் சிறிது நேரம் ஓய்வு எடுத்து வருவதாகக் கூறி தனது அறைக்குச் சென்ற அவர், ஆனால் நீண்ட நேரமாகியும் வரவில்லை.  இதனால் அவரது அறைக்குச் சென்று பார்த்த போது அவர் அங்கு இல்லை.

 

இதனால் இது குறித்து விசாரித்த படக்குழுவுக்கு , அனுபமா கொடைக்கானலிருந்து டெல்லிக்குக் கிளம்பியது தெரிய வந்துள்ளது. உடனே  டெல்லி சென்ற தயாரிப்பாளர், அனுபமாவை மீண்டும் படப்பிடிப்பிற்கு அழைத்து வந்து, மீதிக் காட்சிகளைப் படமாக்கியது குறிப்பிடத்தக்கது.