பயணி தூங்கினார் ,திருடி தூக்கினார் -பஸ்சுக்குள் புகுந்து ,பர்ஸை திறந்து… ,நகையை ஆட்டைய போட்ட பெண்கள்.. 

 

பயணி தூங்கினார் ,திருடி தூக்கினார் -பஸ்சுக்குள் புகுந்து ,பர்ஸை திறந்து… ,நகையை ஆட்டைய போட்ட பெண்கள்.. 

பெங்களூருவில் ஒரு சொகுசு பேருந்துக்குள் புகுந்த இரண்டு பெண்கள் ,பஸ்ஸில் தூங்கிய பயணியிடம் 20 சவரன் நகையை ஆட்டைய போட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சென்ற புதன்கிழமை ஒரு சொகுசு பேருந்து பெங்களூக்குள் மேகரி சர்க்கிள் பகுதியில் வந்துகொண்டிருந்த போது அதில் நீலமங்கள் பகுதியை சேர்ந்த பாக்யா ,பிரியா என்ற இரண்டு பெண்கள்  ஏறினார்கள்

பெங்களூருவில் ஒரு சொகுசு பேருந்துக்குள் புகுந்த இரண்டு பெண்கள் ,பஸ்ஸில் தூங்கிய பயணியிடம் 20 சவரன் நகையை ஆட்டைய போட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சென்ற புதன்கிழமை ஒரு சொகுசு பேருந்து பெங்களூக்குள் மேகரி சர்க்கிள் பகுதியில் வந்துகொண்டிருந்த போது அதில் நீலமங்கள் பகுதியை சேர்ந்த பாக்யா ,பிரியா என்ற இரண்டு பெண்கள்  ஏறினார்கள்.அவர்களிருவரும் சரோஜா என்ற பெண்ணுக்கருகில் பஸ்ஸில் அமர்ந்தார்கள்.அப்போது அவர்கள் திருடிகள் என கண்டுபிடித்த கண்டக்டர் பஸ்சிலிருந்த பயணிகளிடம் ஜாடைமாடையாக எச்சரிக்கையாக இருக்கும்படி கூறினார்.இருப்பினும்,அந்த இரண்டு பெண்களும் அருகிலமர்ந்திருந்த சரோஜா என்ற பெண்ணின் பர்ஸிலிருந்து 20 சவரன் மதிப்புள்ள  தங்க கம்மல் ,செயின் ஆகியவற்றை திருடிக்கொண்டு அடுத்த பஸ்ஸில் ஏறிவிட்டனர் .
திடீரென பர்ஸை பார்த்து நகையை காணாத சரோஜா  கூச்சலிட்டார்.உடனே பஸ்சிலிருந்த கண்டக்டரும் ,சில பயணிகளும் சேர்ந்து அடுத்த பஸ்ஸிலிருந்த அந்த திருடிகளை பிடித்து அவர்களிடமிருந்த நகையை மீட்டனர்.பிறகு அவர்கள் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டனர் .