‘பம்மல் கே சம்பந்தம்’ பட பாணியில் நோயாளியின் வயிற்றில் கத்தரிக்கோல்கள்: அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

 

‘பம்மல் கே சம்பந்தம்’ பட பாணியில் நோயாளியின் வயிற்றில் கத்தரிக்கோல்கள்: அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

ஆபரேஷன் செய்த கத்தரிக்கோலை நோயாளியின் வயிற்றில் வைத்து  மருத்துவர்கள் தைத்து விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்: ஆபரேஷன் செய்த கத்தரிக்கோலை நோயாளியின் வயிற்றில் வைத்து  மருத்துவர்கள் தைத்து விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள  நிஜாம் இன்ஸ்டிடுயூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனைக்கு  33 வயது பெண் ஒருவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பின்னரும் அவருக்கு வயிற்றில் அடிக்கடி வலி ஏற்பட்டு வந்துள்ளது.

இதை தொடர்ந்து வலி அதிகரித்து வந்ததன் காரணமாக தனக்கு ஆபரேஷன் செய்த நிஜாம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மீண்டும் வந்துள்ளார். அப்போது அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது வயிற்றில் இரண்டு கத்தரிக்கோல்கள் இருப்பது தெரிந்து வந்துள்ளது. இதனால் பெண்ணின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

doctor

ஆபரேஷனுக்கு பயன்படுத்திய கத்தரிக்கோல்களை  மருத்துவர்கள் எடுக்க மறந்து விட்டுவிட்டது அப்போது தான் அவருக்கு தெரியவந்துள்ளது. இதனால் மீண்டும் அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டு அந்த கத்தரிக்கோல்கள் அகற்றப்பட்டது.

இவ்விவகாரம் குறித்து காவல்துறையினர்  விசாரித்து வருகின்றனர். அலட்சியமாகச் செயல்பட்ட மருத்துவர்கள் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.