‘பம்ப் செட்’டில் பதினெட்டு வயது பெண் பலாத்காரம்-ஐந்து நாள் அறையில் அடைத்து அராஜகம்  

 

‘பம்ப் செட்’டில் பதினெட்டு வயது பெண் பலாத்காரம்-ஐந்து நாள் அறையில் அடைத்து அராஜகம்  

படோஹி (உ.பி.): உத்தரபிரதேசத்தின் படோஹி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 18 வயதுள்ள  திருமணமான பெண்ணை,  பிணைக் கைதியாக ஐந்து நாட்கள்  அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலிசார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

படோஹி (உ.பி.): உத்தரபிரதேசத்தின் படோஹி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 18 வயதுள்ள  திருமணமான பெண்ணை,  பிணைக் கைதியாக ஐந்து நாட்கள்  அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலிசார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

அதே கிராமத்தைச் சேர்ந்த விஷால் சரோஜ் என்பவர் இந்த பலாத்காரம் செய்தவர் ,  மூன்று மாதங்களுக்கு முன்புதான் அப்பெண்  திருமணம் செய்து கொண்டார்.

விஷால் சரோஜ் ஐந்து நாட்களுக்கு முன்பு அந்தப் பெண்ணின் மாமியார் வீட்டிற்கு வந்து அப்பெண்ணின்  தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அழைத்துச் சென்று  ஒரு அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார் .
பாதிக்கப்பட்ட பெண்ணின்  தாயின் உடல்நிலை குறித்து விசாரிக்க, மாமியார் அவரின் வீட்டுக்கு சென்றபோது அந்த பெண் வீட்டிற்கு வரவில்லை என்று சொன்னார்கள் , அதைத் தொடர்ந்து அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
வியாழக்கிழமை சரோஜுக்கு சொந்தமான விவசாய வயலின் நடுவில் அமைந்துள்ள ஒரு அறையில் இருந்து அந்த பெண் மீட்கப்பட்டார், அதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டதாக போலீசார் கூறினர் ..
குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு, பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.