‘பப்ஜிக்கு நோ’ சொன்ன தந்தையின் தலையை வெட்டிய மகன்!

 

‘பப்ஜிக்கு நோ’ சொன்ன தந்தையின் தலையை வெட்டிய மகன்!

பப்ஜி விளையாடுவதைக் கண்டித்த தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெலகாவி: பப்ஜி விளையாடுவதைக் கண்டித்த தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள காகதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி சங்கரப்பா கும்பார். இவருக்கு  ரகுவீர்  என்ற 21வயதான  மகன் உள்ளார். ரகுவீர்  டிப்ளமோ படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததோடு எந்த நேரமும் செல்போனில் பப்ஜி  விளையாடி வந்துள்ளார். இதை அவரது தந்தை கண்டித்து வந்துள்ளார். 

pubg

இதையடுத்து கடந்த 8ஆம் தேதி செல்போன் ரீசார்ஜ் செய்வதற்குப் பணம் கேட்டிருக்கிறார் ரகுவீர்.ஆனால் அவரது தந்தை பணம் தரமறுத்துள்ளார். இதனால் அக்கம்பக்கம் வீட்டிலுள்ள ஜன்னல்களை அடித்து நொறுக்க அவர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.போலீசார் ரகுவீருக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். பின்பு இரவு முழுவதும் மீண்டும் பப்ஜி  விளையாடியுள்ளார் ரகுவீர். இதனால் தந்தைக்கும் மகனுக்கும் தகராறு ஏற்படவே, வீட்டிலிருந்த அரிவாளை  கொண்டு சங்கரப்பாவை சரமாரியாக வெட்டியுள்ளார் ரகுவீர். இதில் சங்கரப்பாவின் தலை துண்டாகி போயுள்ளது. இதையடுத்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். 

murder

சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து  போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து, சங்கரப்பா உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ரகுவீரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.