பன்னீரை நெருப்பாக்கும் எடப்பாடி… அதிரி புதிரியாகும் அதிமுக..!

 

பன்னீரை நெருப்பாக்கும் எடப்பாடி… அதிரி புதிரியாகும் அதிமுக..!

முதல்வர் எடப்பாடி வெளிநாட்டு பயணத்தில் உள்ள நிலையில் துணை முதல்வர் ஓ.பி.எஸிடம் அந்த பதவிகொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முதல்வர் எடப்பாடி வெளிநாட்டு பயணத்தில் உள்ள நிலையில்  துணை முதல்வர் ஓ.பி.எஸிடம் அந்த பதவிகொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால்  பொறுப்பு முதல்வர் பதவி அவரிடம் கொடுக்கப்படவில்லை. இதனால் ஓபிஎஸ் தரப்பு கடும்அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது.  கட்சியையும், ஆட்சியையும் எடப்பாடி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வரத்திட்டம் போட்டுள்ளதாகஅக்கட்சி வட்டாரங்கள் கூறி வருகின்றன.

இதனால் கட்சி பொதுக்குழு மற்றும் உள்ளாட்சி தேர்தல் வருவதற்குள் கட்சிநிர்வாகிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரையும் தன் பக்கம் கொண்டு வரும் நடவடிக்கையில் எடப்பாடி தீவிரமாக இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. தேர்தல் வருவதற்கு முன்பாக அனைத்தையும் சரி செய்யும் பணிகளை எடப்பாடி முடித்து விட்டார் என்று கூறுகின்றனர். அதோடு, உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி தலைவர், ஊராட்சி தலைவர், மாநகராட்சி மேயர், கவுன்சிலர் பதவிகளை தனது ஆதரவாளர்களுக்கு கொடுத்துதன் பக்கம் இழுக்கும் வேலையை சிறப்பாக செய்து கட்சியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறாராம் எடப்பாடி.edappadi

இதனால், கட்சியில் பெருவாரியான நிர்வாகிகள் இ.பி.எஸ்  தரப்புக்கு ஆதரவான மன நிலையில் இருக்கின்றனர். எடப்பாடியின் இந்த நடவடிக்கையால் பெரும் அதிர்ச்சியில் ஓ.பி.எஸ் தரப்பு இருப்பதாகவும், முன்பு இருந்ததை விட ஓ.பி.எஸ் தரப்புக்கு ஆதரவு  ரொம்பவே குறைந்துள்ளதாகவும் சொல்கின்றனர்.

பொறுப்புகள் எதுவும் வாங்கித் தராததால் பன்னீர் ஆதரவாளர்கள் பெரும்பாலானோர் அவர் மீது அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.