பந்தா பண்ண கீர்த்தி சுரேஷ் இப்போ இறங்கி வந்துட்டாரு… ஆச்சர்யத்தில் கோலிவுட்!

 

பந்தா பண்ண கீர்த்தி சுரேஷ் இப்போ இறங்கி வந்துட்டாரு… ஆச்சர்யத்தில் கோலிவுட்!

நடிகை சாவித்திரியின் சுயசரிதைப் படத்தில் நடித்தாலும் நடித்தார், அதன் பிறகு நடிகை கீர்த்தி சுரேஷ் செய்து வந்த அலும்பல்கள் எல்லாமே டூ மச் ரகம் தான். அவ்வளவு பெரிய நடிகையோட கதையில நடிச்சுட்டேன். இனி துக்கடா படத்துல எல்லாம் நடிக்க மாட்டேன் என்று சொல்லி நீ…ண்ட இடைவெளி விட்டார். கதைச் சொல்லப் போறவங்க கிட்ட எல்லாம், நான் இப்போ தெலுங்குல ரொம்ப பிஸி..அதனால இப்போதைக்கு நடிக்க முடியாது என்று கூறி வந்தார்.

keerthi suresh

நடிகை சாவித்திரியின் சுயசரிதைப் படத்தில் நடித்தாலும் நடித்தார், அதன் பிறகு நடிகை கீர்த்தி சுரேஷ் செய்து வந்த அலும்பல்கள் எல்லாமே டூ மச் ரகம் தான். அவ்வளவு பெரிய நடிகையோட கதையில நடிச்சுட்டேன். இனி துக்கடா படத்துல எல்லாம் நடிக்க மாட்டேன் என்று சொல்லி நீ…ண்ட இடைவெளி விட்டார். கதைச் சொல்லப் போறவங்க கிட்ட எல்லாம், நான் இப்போ தெலுங்குல ரொம்ப பிஸி..அதனால இப்போதைக்கு நடிக்க முடியாது என்று கூறி வந்தார். தெலுங்கில் இருந்து கதைச் சொல்ல வருகிறவர்களிடம்…தமிழ் சினிமாவில் மூணு வருஷத்துக்கு பிஸியாக இருக்கிறேன் என்று பட வாய்ப்புகளை தவிர்த்து வந்தார்.

keerthi suresh

எல்லாமே கொஞ்ச காலத்துக்குத் தானே… அதன் பிறகு சுவற்றில் அடித்த பந்தாய் எல்லோரும் திரும்பி வந்த பிறகு யாருமே கதைச் சொல்ல போகாததால், தற்போது அறிமுக இயக்குநரின் படத்தில் நடிக்க துவங்கியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அறிமுக இயக்குனர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தோட படப்பிடிப்பு இன்று கொடைக்கானலில் துவங்கியது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். ‘மேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தயாரித்த ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.