பத்துமலை முருகன் கோவில்: உண்மை தன்மை கெட்டு விட்டது என மலேசிய அரசு குற்றச்சாட்டு! : அதிர்ச்சி தரும் சம்பவம்!

 

பத்துமலை முருகன் கோவில்: உண்மை தன்மை கெட்டு விட்டது என மலேசிய அரசு குற்றச்சாட்டு! : அதிர்ச்சி தரும் சம்பவம்!

கோலாலம்பூர்: மலேசியாவின் பிரபல பத்து மலைக் முருகன் கோயிலின், படிக்கட்டுகளில் மாற்றம் செய்துள்ளதற்கு மலேசிய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கோலாலம்பூருக்கு அருகில் இருக்கும், சுண்ணாம்பு மலையில் அமைந்துள்ளது பத்துமலை  முருகன் கோயில், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற இக்கோவில் 272 படிகளைக்  கொண்டது. இங்குத் தை பூசத் திருநாள் இங்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அந்த 272 படிகளுக்கும் கோயில் நிர்வாகம் சார்பில், 3டி வடிவம் போல்  பெயின்ட் மூலம் நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. 

murugan

இந்நிலையில்  இது குறித்து கூறியுள்ள கலாச்சாரத் துறை துணை அமைச்சர், முகமதி பக்தியார் வான் சிக், இது போன்ற, மாற்றங்கள் செய்வது, அதன் புராதாணத் தன்மையைச் சீரழிக்கும் விதமாக இருக்கிறது என்றும்  இது போன்ற புராதான சின்னங்களில், அனுமதியின்றி பெரிய மாற்றங்கள் செய்யக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

கோயில் கமிட்டிக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்படும் என்று  தெரிவித்துள்ள அவர்,  படிக்கட்டுகளுக்கு புதிய நிறம் கொடுக்கப்பட்டுள்ளது பத்து மலையின் உண்மைத் தன்மைய கெடுத்துவிட்டதாகவும் குற்றச்சாட்டியுள்ளார்.