பத்திரிகை சுதந்திரத்திற்கு பாசிச பாஜக விடுத்திருக்கும் அச்சுறுத்தல்: நக்கீரன் கோபால் கைதுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

 

பத்திரிகை சுதந்திரத்திற்கு பாசிச பாஜக விடுத்திருக்கும் அச்சுறுத்தல்: நக்கீரன் கோபால் கைதுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பது பத்திரிகை சுதந்திரத்திற்கு பாசிச பாஜகவும், பொம்மை அதிமுகவும் விடுத்திருக்கும் பகிரங்க அச்சுறுத்தல் என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை: நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பது பத்திரிகை சுதந்திரத்திற்கு பாசிச பாஜகவும், பொம்மை அதிமுகவும் விடுத்திருக்கும் பகிரங்க அச்சுறுத்தல் என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நிர்மலாதேவி விவகாரத்தில் நக்கீரன் இதழ் கட்டுரை ஒன்று வெளியிட்டதால் அந்த இதழின் ஆசிரியர் கோபாலை காவல்துறையினர் கைது செய்து அவர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கை சர்வாதிகார போக்கை காண்பிப்பதாகவும் பத்திரிகை சுதந்திரம் நெரிக்கப்படுகிறது எனவும் பலர் கூறி வருகின்றனர். மேலும்கோபாலை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நக்கீரன் கோபால் கைது தனது ட்விட்டர் பக்கத்தில், பேராசிரியை விவகாரத்தில் “தொடர்” ஒன்றை வெளியிட்டு வரும் நக்கீரன் பத்திரிகை ஆசிரியரை, சர்வாதிகார – பாசிச மனப்பான்மையுடன் கைது செய்திருப்பது, கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கு பாசிச பாஜக அரசும் – பொம்மை அதிமுக அரசும் விடுத்திருக்கும் பகிரங்க அச்சுறுத்தல்! என பதிவிட்டு இருக்கிறார்.

 

மேலும் மற்றொரு ட்வீட்டில், தங்கள் சித்தாந்தங்களுக்கு வேண்டாதவர்களை கைது செய்யத் தூண்டும் மத்திய பா.ஜ.க அரசும், தமிழக ஆளுநரும் கொல்லைப்புற வழியாக முகமூடி அணிந்துகொண்டு தங்கள் கட்டளைகளை நிறைவேற்ற எடுபிடி அடிமை அரசை பயன்படுத்துவது வெட்கக்கேடானது.  உடனடியாக நக்கீரன் கோபால் அவர்களை விடுதலை செய்க எனவும் பதிவிட்டுள்ளார்.