பதவியை விட்டு போகமாட்டேன்: குமாரசாமி அதிரடி

 

பதவியை விட்டு போகமாட்டேன்: குமாரசாமி அதிரடி

விவசாயக்கடனை தள்ளுபடி செய்யாமல் பதவியை விட்டு போகமாட்டேன் என கர்நாடக முதல்வர் குமாரசாமி அதிரடியாக கூறியுள்ளார்.

பெங்களூரு: விவசாயக்கடனை தள்ளுபடி செய்யாமல் பதவியை விட்டு போகமாட்டேன் என கர்நாடக முதல்வர் குமாரசாமி அதிரடியாக கூறியுள்ளார்.

கர்நாடக அரசின் விவசாயத்துறை சார்பில் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கும் விழா அம்மாநிலத்தின் பாகல்கோட்டையில் நடந்தது.இவ்விழாவில் கர்நாடக முதல்வர் குமாரசாமி கலந்து கொண்டு பேசுகையில், 

விவசாயிகளை ஏமாற்றுவதாக பாஜக கூறுகிறது. ஆனால் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வலுவான முடிவை எடுத்துள்ளோம். விவசாயிகளை நாங்கள் ஏமாற்ற மாட்டோம். விவசாய கடனை தள்ளுபடி செய்யப்படும். கூட்டணி அரசுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. விவசாய கடனை தள்ளுபடி செய்யாமல் நான் பதவியை விட்டு போக மாட்டேன். 

விவசாய கடன் தள்ளுபடியால் 44 லட்சம் விவசாயிகள் பயன் பெறுகின்றனர். கடன் தள்ளுபடிக்கு நிதி பற்றாக்குறை இல்லை. தேசிய வங்கி விவசாய கடனும் தள்ளுபடி செய்யப்பட்டது. தேசிய வங்கிகளில் கடனை 4 தவணைகளில் திரும்ப செலுத்துவோம். வருகிற பட்ஜெட்டில் ரூ.25 ஆயிரம் கோடிக்கு விவசாயக்கடன் தள்ளுபடி அறிவிப்பு இடம் பெறும் என்றார்.