பதவியை காப்பாற்ற உளறுகிறார் அமைச்சர் ஜெயக்குமார்: கமல்ஹாசன் கிண்டல்

 

பதவியை காப்பாற்ற உளறுகிறார் அமைச்சர் ஜெயக்குமார்: கமல்ஹாசன் கிண்டல்

பதவி பறிபோய்விடும் என்ற பயத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பதற்றமாக இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை: பதவி பறிபோய்விடும் என்ற பயத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பதற்றமாக இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்களை மதிக்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய – மாநில அரசுகள் கொண்டு வர முயல்கிறது. தனது பதவி பறி போய்விடும் என்ற பயத்தில் அமைச்சர் ஜெயக்குமார் மிகவும் பதற்றமாக சம்பந்தம் இல்லாமல் ஏதேதோ பேசி வருகிறார்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், “கமல்ஹாசன் பேசுவது அவருக்கே புரியாது. டிக்‌ஷனரியில் புரட்டிப் பார்த்து தான் புரிந்துகொள்ள வேண்டும்” என அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.