பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஐடி ஊழியர் மீது புகார்: இதுவரை 50 லட்சம் ஏமாற்றியதாக தகவல்!

 

பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஐடி ஊழியர் மீது புகார்: இதுவரை 50 லட்சம் ஏமாற்றியதாக தகவல்!

சுமித்ராவின் ஆசை வார்த்தையைக் கேட்டு சுந்தர் 8 லட்சத்தை சுமித்ராவிடம் கொடுத்துள்ளார். 

ஐடி ஊழியர்களை மோசடி செய்ததாக பெண் ஐடி ஊழியர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த பெருங்களத்தூரை சேர்ந்தவர்  சுந்தர். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது சகோதரியின் தோழி என சுமித்ரா என்பவர் இவருக்கு அறிமுகமாகியுள்ளார். அவர் தனது கணவர் சிங்கப்பூரில் தொழிலதிபராக இருப்பதாகவும், அவரது தொழிலில் முதலீடு செய்தால், முதலீட்டுத் தொகையில் 20 சதவீதம் லாபம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார், சுமித்ராவின் ஆசை வார்த்தையைக் கேட்டு சுந்தர் 8 லட்சத்தை சுமித்ராவிடம் கொடுத்துள்ளார். 

ttn

இதனையடுத்து சுமித்ராவை சுந்தரால் தொடர்புகொள்ள முடியவில்லை. போனையும் ஸ்விட்ச் ஆப் செய்து வேறு நம்பரை மாற்றியுள்ளார். இதையடுத்தே தான் ஏமாற்றப்பட்டுவிட்டதைச் சுந்தர் உணர தொடங்கியுள்ளார்.  இந்நிலையில் சுந்தர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சுமித்ரா மீது  புகார் கொடுத்துள்ளார்.  இதுகுறித்து விசாரணையில் சுமித்ரா இதுவரை பலரிடமிருந்து  50 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றி பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதுதவிர பலரும் சுமித்ரா மீது புகார் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.