பண தகராறில் பயங்கரம் -மைத்துனி முகத்தில் ஆசிட் வீச்சு -கருகி கதறும் கொடூரம்.. 

 

பண தகராறில் பயங்கரம் -மைத்துனி முகத்தில் ஆசிட் வீச்சு -கருகி கதறும் கொடூரம்.. 

இப்போது ஆசிட் பாத்ரூமில் ஊற்றுகிறார்களோ இல்லையோ, கண்டிப்பாக சண்டை வந்தால் உடனே முகத்தில் ஊற்றிவிடுகிறார்கள் .அதை தடுக்க எத்தனையோ சட்டம் போட்டும் ,விழிப்புணர்வு சினிமா எடுத்தும் ஆசிட் வீச்சு சம்பவம் குறைவதாக தெரியவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையே நரகமாகி விடுகிறது.

இப்போது ஆசிட் பாத்ரூமில் ஊற்றுகிறார்களோ இல்லையோ, கண்டிப்பாக சண்டை வந்தால் உடனே முகத்தில் ஊற்றிவிடுகிறார்கள் .அதை தடுக்க எத்தனையோ சட்டம் போட்டும் ,விழிப்புணர்வு சினிமா எடுத்தும் ஆசிட் வீச்சு சம்பவம் குறைவதாக தெரியவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையே நரகமாகி விடுகிறது.

கர்நாடக மாநிலம் மங்களூர் அருகில் தட்சிணா கன்னட மாவட்டம்- கடப்பாவில் தனது மைத்துனி மீது ஒரு வாலிபர் ஆசிட் வீசினார். இதனால் அந்த  பெண்ணின் முகத்தில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.
கடபா காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட ஜெயானந்தா கோட்டரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் வியாழக்கிழமை நிகழ்ந்தது. பாதிக்கப்பட்ட பெண் ஸ்வப்னாவின் மூன்று வயது மகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.அவர் அருகில் விளையாடிக்கொண்டிருந்தார் .
கோட்டரிக்கும் அவரது மைத்துனிக்கும்  பணத்  தகராறு இருந்து வந்ததாகவும் அதனால் ஆத்திரமுற்ற வாலிபர் அந்தப் பெண்ணின் மீது ஆசிட் வீசியதாக  கூறப்படுகிறது.பயங்கரமாக முகம் கருகிய நிலையில் ஸ்வப்னா அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்