பண்ணை வீட்டில் பெண்ணை அனுப்பி படம் பிடித்தனர் -பல லட்சம் கேட்டு மிரட்டினர்- மிஸ்டு கால் பெண்னால் ‘புண்’னானார்..
கோயம்புத்தூரில் ஒரு தொழிலதிபருக்கு காம வலை வீசி ,அதில் வீழ்ந்த அவரின் படுக்கையறை காட்சிகளை படமெடுத்து மிரட்டி அவரிடம் நகை பணத்தை பறித்து ,மேலும் 25 லட்சம் கேக்கும் ஒரு கும்பலை போலீசார் கைது செய்தனர் .
கோயம்புத்தூரில் ஒரு தொழிலதிபருக்கு காம வலை வீசி ,அதில் வீழ்ந்த அவரின் படுக்கையறை காட்சிகளை படமெடுத்து மிரட்டி அவரிடம் நகை பணத்தை பறித்து ,மேலும் 25 லட்சம் கேக்கும் ஒரு கும்பலை போலீசார் கைது செய்தனர் .
கோயம்புத்தூரை சேர்ந்த 32 வயது தொழிலதிபர் வினோத்குமார் .இவர் ஒரு துணி ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார் .இவருக்கு ஜனவரி 1ம் தேதி பிரேமா என்ற ஒரு பெண் போன் செய்து நாம் சந்திக்கலாமா ? என்றுகேட்டுள்ளார் .உடனே சபலம் தட்டிய வினோத் அவரை பல இடங்களில் சந்தித்து இறுதியாக அப்பெண்ணை அவரின் பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று ,இருவரும் உல்லாசமாக இருந்தனர் .அப்போது அவருக்கு தெரியாமல் ஒரு கும்பல் அவர்கள் உல்லாசமாக இருந்ததை படம்பிடித்துள்ளனர்
.திடீரென்று அந்த கும்பல் அந்த இரவில் அவரை கட்டிபோட்டுவிட்டு அவரிடமிருந்த 5 பவுன் நகைகள் ,27500ரூபாய் பணம் ,8 லட்ச ரூபாய் கார் அனைத்தையும் எடுத்து சென்று விட்டனர் .இதில் அவரோடு உல்லாசத்துக்கு வந்த பெண்ணுக்கும் பங்குண்டு என்று தெரிந்து வினோத் அதிர்ச்சியடைந்தார் .
பிறகு சென்றவாரம் அந்த கும்பல் தொழிலதிபர் வினோத்குமாருக்கு போன் செய்து 25 லட்ச ருபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர் .கொடுக்க தவறினால் அவரின் உல்லாச வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிடுவோம் என்று பயமுறுத்தி பணம் கேட்டனர் ,அதிர்ச்சியுற்ற வினோத் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் .போலீசார் அவர்களின் போனை track செய்து சுதா என்ற பெண்ணின் தலைமையில் செயல்பட்ட ஆறு பேர் கொண்ட கும்பலை கைது செய்து சிறைக்கு அனுப்பிவைத்தனர் .