பண்ட், ஷ்ரேயாஸ் அபாரம்… இந்தியா 288 ரன்கள் குவிப்பு!

 

பண்ட், ஷ்ரேயாஸ் அபாரம்… இந்தியா 288 ரன்கள் குவிப்பு!

முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 288 ரன்கள் குவித்தது. பண்ட், ஷ்ரேயாஸ் அரைசதம் கடந்தனர்.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பொல்லார்டு பந்துவீச்சை தேர்வு செய்தார். 

ஷிகர் தவான் காயம் காரணமாக வெளியேறியதால், ரோகித் சர்மாவுடன் கேஎல் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கினார். கேஎல் ராகுல் 6 ரன்களுக்கும் கேப்டன் கோலி 4 ரன்களுக்கும் ஆட்டமிழக்க இந்திய அணி தடுமாற்றம் கண்டது.

 

சிறிது நேரம் நன்கு ஆடிவந்த ரோகித் சர்மா 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

பண்ட்

ஷ்ரேயாஸ் ஐயர் 70 ரன்களும், பண்ட் 71 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்தது.

அடுத்து வந்த, கேதர் ஜாதவ் சென்னை மைதானத்தில் தனக்கு இருக்கும் அனுபவத்தை பயன்படுத்தி கீழ் வரிசையில் ரன் சேர்க்க உதவினார். இவர் 35 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 288 ரன்கள் சேர்த்தது. சஹார் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

விண்டீஸ் அணி சார்பில் காட்ரெல், பால் மற்றும் ஜோசப் மூவரும் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.