பணி மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு! மருத்துவமனை டீன் தற்கொலை முயற்சி

 

பணி மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு! மருத்துவமனை டீன் தற்கொலை முயற்சி

மேலூர் அரசு மருத்துவமனை டீன் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்தது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலூர் அரசு மருத்துவமனை டீன் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்தது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் முதன்மை மருத்துவ அதிகாரியாக இருப்பவர் பிரியா தேன்மொழி. இவரை அப்பணியிலிருந்து மாற்றிவிட்டு அவருக்கு பதிலாக முதன்மை மருத்துவ அதிகாரி பணியில் முன்பு இருந்த மருத்துவர் ஜெயந்தி என்பவருக்கு மீண்டும் அதே பணி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால் அதிருப்தியடைந்த பிரியா தேன்மொழி, பணியில் இருந்து மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாத்திரைகள் சாப்பிட்டு மருத்துவமனையிலேயே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

 அருகிலிருந்த மருத்துவ உதவியாளர்கள் அவரை மீட்டு அதே அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.