பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட உடுமலை கௌசல்யா: காரணம் தெரியுமா?

 

பணியிலிருந்து சஸ்பெண்ட்  செய்யப்பட்ட உடுமலை கௌசல்யா: காரணம் தெரியுமா?

குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்ட் கிளார்க் பணியிலிருந்து உடுமலை கவுசல்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

குன்னூர் : குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்ட் கிளார்க் பணியிலிருந்து உடுமலை கவுசல்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

kousalya

உடுமலைப்பேட்டையில் கவுசல்யா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டதால் சங்கர் என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பான வழக்கில், கவுசல்யாவின் தந்தைக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

kousalya

இதையடுத்து  சக்தி என்ற பறை இசைக் கலைஞரை கடந்த டிசம்பர் மாதம்  கவுசல்யா மறுமணம் செய்து கொண்டார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தியாகு போன்றவர்கள் முன்னின்று இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர்.  கவுசல்யா மறுமணம் செய்து கொண்ட சக்தி மீது தற்போது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

kousalya

இந்நிலையில் குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்ட் கிளார்க் பணியிலிருந்து உடுமலை கவுசல்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய குற்றச்சாட்டில் கவுசல்யாவை பணியிடை நீக்கம் செய்து நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.