‘பணம் யாருக்கு வேணும்…வெங்காய மூட்டையை தூக்குடா’ வெங்காய விலை உயர்வால் நடந்த கொள்ளை சம்பவம்!

 

‘பணம் யாருக்கு வேணும்…வெங்காய மூட்டையை தூக்குடா’  வெங்காய விலை உயர்வால் நடந்த கொள்ளை சம்பவம்!

இதன் எதிரொலியாகத்  தான் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.  இதைக் கட்டுப்படுத்த  மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. வெங்காய விளைச்சலில் முன்னணியில் இருக்கும் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில்  பெய்த கனமழையால் வெங்காய விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாகத்  தான் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. 

ttn

வெங்காயத்தின் இந்த விலை உயர்வால் சாமானிய மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலர் திருடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது தான் இன்னும் கொடுமையிலும் கொடுமை. 

onion

அந்த வகையில் கொல்கத்தாவில் அக்ஷய் தாஸ் என்பவர் சுடஹட்டா பகுதியில் கடை ஒன்று நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை  வழக்கம் போல கடையை திறந்தபோது  அங்கிருந்த பொருட்கள் சிதறி கிடந்தது.  இதனால் கொள்ளையர்கள் நுழைந்திருப்பார்களோ என்று சந்தேகித்த அவர், ஓடிப்போய் கல்லாவை பார்த்தார். அதில் வாய்த்த பணம் வைத்த மாத்திரத்தில் அப்படியே இருந்தது. ஆனால் ரூ.50ஆயிரம் மதிப்பிலான வெங்காய மூட்டையை காணவில்லை. அதுமட்டுமின்றி இஞ்சி, பூண்டு மூட்டைகளும்  காணாமல் போயிருந்தது. இதுகுறித்து   அக்ஷய் தாஸ் போலீசில் புகார் கொடுத்துள்ள நிலையில் போலீசார் அந்த வெங்காய திருடர்களைத்  தேடி வருகின்றனர்.