பணம் கேட்டு என் குடும்பத்தை மிரட்டுகிறார்கள்: மீரா மிதுன் குற்றச்சாட்டு

 

பணம் கேட்டு என் குடும்பத்தை மிரட்டுகிறார்கள்: மீரா மிதுன் குற்றச்சாட்டு

பிக் பாஸ் சீசன் 3யில் 16வது போட்டியாளர்களாக நுழைந்து பிரபலமானவர் மீரா மிதுன்.

பிக் பாஸ் சீசன் 3யில் 16வது போட்டியாளர்களாக நுழைந்து பிரபலமானவர் மீரா மிதுன். தொடர்ச்சியாக இவர் செய்த சில செயல் ஹவுஸ் மேட்ஸ் மட்டுமின்றி ரசிகர்களுக்கு எரிச்சல் முட்டும் வகையிலிருந்ததால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இவர் பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளிலிருந்தே தொழிலதிபர் ஜோ மைக்கேல் அவர் பல மோசடி செய்துள்ளதாகக் கூறி ஊடகங்களுக்குப் பேட்டியளித்த வந்தார். சமீபத்தில் மீரா மிதுன், ஜோவை ரகசியமாகக் கொலை செய்ய திட்டம் திட்டிய ஆடியோ பதிவு வெளியானது. அதனால் அவர் மீது ஜோ மைக்கேல் காவல்துறையிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்த மீரா  திட்டமிட்டுள்ளதாக’ கூறியுள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

meera

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து அவர் கூறுகையில், ‘நான் பேசியதாக ஒரு வாய்ஸ் நோட் வெளியாகியுள்ளது. அதனை நான் முழுமையாகக் கேட்கவில்லை. அதனால் அது எங்கு தவறாக பொருத்தப்பட்டிருக்கிறது என்பது எனக்கு தெரியாது. இதற்கெல்லாம் முதல் காரணம் கேரளாவைச் சேர்ந்த அஜித் ரவி என்பவர் தான். நான் பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு ஜோ பேசிய வீடியோக்களை யூடியூபில் பார்த்தேன். நான் தான் முதலில் அவர்களைப் பற்றி புகார் அளித்தேன். அதன் பிறகே அவர்கள் என்னைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள். 

அதுமட்டுமின்றி அவர்கள் பணம் கேட்டு எனது குடும்பத்தை மிரட்டுகிறார்கள். அதனால் அவர்கள் மீது  சட்ட படி நடவடிக்கை எடுக்கப்போகிறேன்’ என்று கூறியுள்ளார்.